VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

Saturday 3 January 2015

சோதிடமும்--சாதியியமும்.....ஒரு பார்வை..04 / 01 / 2015.....


அன்புடையீர் வணக்கம்…
சோதிடத்தில் சாதிய அமைப்பு உள்ளதா என்று பலர் கேட்கின்றனர்…..இந்த வினாவிற்கு விடையாக சில செய்திகளைச் சொல்லி பின்னர் சோதிடத்தில் எவ்வாறு சாதிய அமைப்பு உள்ளது என்று பார்ப்போம்.

இந்திய சோதிட முறை :

யவண சாதகம்,சத்யாச்சாரியார், ஜீவசர்மா,வராகமிகிரர்.பொன்ற சோதிடப் பெரியோர்களின் சாதகப் பலன்கள் கூறும் நூல்களின் வருகைக்குப் பின்னரே இந்திய சோதிடம் பெறும் வளர்ச்சி பெற்றது. இவர்கள் எழுதிய சோதிடப்பலன்கள் அனைத்தும் அடிப்படை விதிகள் மாறாமலும் ஒருசில கருதுகோள் சிந்தனைகளுடன் கூறப்பட்டவையாகும். உண்மையில் அன்பர்களே சோதிடவியல் பலன்களை எழுதியவர்கள் சோதிடர்களே !!!!மற்றவர் எவரும் எழுதவில்லை….ஆதலால் அவர்களின் கருத்துக்கள் அனைத்தும் பொதுவானவையாகவே இருக்கின்றன….

.எ.கா. மேசராசிக்கு ஒருபலனைக் கூறினால் அப்பலன் மேசராசியில் பிறந்த அனைவருக்கும் கூறியதாகும். தனிஒரு மனிதருக்கு கூறப்படவில்லை. பின்னர் இப்பலன்களை தனி ஒரு மனிதருக்கு எப்படி கூறுவது என்ற வினா எழுகிறது…..அதற்காகவே பலன்கள் கூறும் பொழுது

காலம்,தேசம்,,வர்த்தமானம்,சாதி,மதம்,நிறபேதம், 
யுக்தி,சுருதி,அனுபவம் என்பதை கருத்தில் கொண்டு பலனுரைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது,

அப்படியானால் சோதிடவியல் பலன்களை நூலில் கூறியவாறு அப்படியே எடுத்துரைக்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது……ஏனெனில் அவை அனைத்தும் பொதுப்பலன்கள் ஆகும்..எனவே சரியான பலனைக் கண்டு பிடிக்க மேலே கூறப்பட்ட வழிகளைக் கடைபிடிக்கவேண்டும்…..

காலம்:
காலம் என்பது மிகவும் முதன்மையானதாகும். நமக்கு பலன்கள் கூறுவதற்கு எழுதப்பட்ட நூல்களின் காலம் பழமையானதாகும்.. அக்காலத்தில் இரும்பு சம்பந்தமான தொழில் என்று எழுதியிருப்பர். அதே கூற்றை தற்பொழுது கூறினால் தவறாக வரும்.. ஏனெனில் தற்பொழுது இரும்பு சம்பந்தமான தொழில் என்பதிலிருந்து மாறி தனித் தனியாக தொழிலைக்கூறும் அளவிற்கு சூழ்நிலை உள்ளது. எனவே காலத்திற்கு ஏற்றாற் போல் பலனைக் கண்டு பிடிக்கவேண்டும்.

மற்றொரு காலம் என்பது இயற்கையைச் சார்ந்ததாகும். எந்தப் பலனை எந்தக் காலத்தில் கூறினால் சரியாக வரும் என்று ஆராய்ந்து கூற வேண்டும். பருவமாற்றங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும்……

தேசம்:

ஒவ்வொரு ஊரிலும் வாழ்வியல் முறை மாற்றமுடனே காணப்படும். தங்களுடைய கலாச்சார அமைப்பிற்கு ஏற்ப சில விதிகளையும். விலக்குகளையும் ஏற்படுத்தியிருப்பர். அவை சோதிடத்தின் பலன்களை குழப்பமடையச் செய்யும்.

எ.கா…..குஜராத்தில் மக்கள் அதிகமாக மது அருந்துவதற்கு வாய்ப்பில்லை. எனவே சோதிடத்தில் அவை சம்பந்தமான பலன்களைப் பார்த்துக் கூற வேண்டும்…அதேபோல்  தமிழகத்தில் மக்கள் மது அருந்துவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இங்கு சோதிடப்பலன்களை இதற்கு ஏற்றாற் போல் கூறவேண்டும்…….இவை போல் ஒவ்வொரு இடத்திலும் மக்கள் தங்கள் வசதிக்கு விதிகளை ஏற்படுத்தி வாழ்வதால் பலன்களை அவற்றிற்கு தகுந்தாற்போல் கூற வேண்டும். (ஊத்துக்குளி- வெண்ணைத் தொழில்//////திருப்பூர்-துணித் தொழில்)

வர்த்தமானம்;

உண்மை நிலை.அதாவது யதார்த்தமான நிலைகளை அறிந்து கொள்ள வேண்டும். இதுவும் பலன் கூறுவதற்கு பயனுள்ளதாகும். தற்பொழுதுள்ள மாற்றங்களை அறிந்து கொண்டே இருத்தல் வேண்டும்..அதனாலேயே சரியான பலன்களைக்கூற முடியும்

சாதி (ஜாதி);

சோதிடம் சொல்வதிலேயே மிகவும் சிக்கலான பகுதியாக உள்ளது..
சாதி,,சாதி,,,சாதி………என்னய்யா இந்த சாதி ? சாதியை வைத்து அப்படி என்ன பலன்களைக் கண்டு பிடிக்கமுடியும்??
இந்தியாவில் எங்கு பிறந்தாலும் அவர் சாதி என்ற அமைப்பிற்குள் கட்டாயம் வந்து விடுவார். ஏற்றுக்கொள்கிறோமோ,,, மறுதளிக்கிறோமோ,,,சாதி என்பது நமது தலைமேல் உட்கார்ந்து விடும். இதை மாற்ற எவராலும் முடியாது…..இந்து சமயமே சாதிகளுக்கு வித்திட்ட சமயமாகும்….

இந்துசமய சாதிய அமைப்பு::;…….இந்துசமயத்தை தோற்றுவித்த காலத்தில் நான்கு வர்ணங்களில் மக்கள் பிரிக்கப்பட்டனர். அவை 1.அந்தண்ர். / 2.சத்திரியர் / 3. வைசியர் / 4.சூத்திரர்..ஆகியனவாகும். பின்னர் சற்சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்றெல்லாம் பிரித்தனர். இவ்வாறு வர்ணங்கள் பிரிக்கப்பட்டு அவற்றிற்குரிய தொழில்களும் பிரிக்கப்பட்டன……..இதன் வழியாக வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது…

பின்னர் கி.மு முதலாம் நூற்றாண்டில் மனு தர்ம சாத்திரம் என்ற நூல் உருவாக்கப் பட்டது…..இது ஒன்றே இந்து சமயத்தில் சாதிகளை உருவாக்கி அவரவர் செய்யும் தொழிலையும் கூறியது.
மனுதர்மம்… இந்த ஸ்மிருதி நூலில் தான் இந்துக்களுக்குரிய சாதிய அமைப்பும் ,,,,புனிதம்//தீட்டு..போன்ற விதிகளும் கூறப்பட்டன. எப்படியெனில் மேலே கூறப்பட்ட நான்கு வர்ணத்தினரும் தமது வர்ணங்களில் திருமணம் செய்வதை விட்டு விட்டு. வேறு வர்ணத்தினரையும் திருமணம் செய்தனர். அதனால் வர்ணக் கலப்பு ஏற்பட்டன. இதன் விளைவாக பிறந்த குழந்தை எந்த வர்ணத்தை சார்ந்த்து என்று பிரிக்க முடியவில்லை..

ஏனெனில் ஆண்.பெண் இருவரும் ஒரே வர்ணத்தில் திருமணம் செய்து பெற்றெடுக்கும் குழந்தையே அதே வர்ணமாகும். வர்ணக்கலப்பில் பிறக்கும் குழந்தை எந்த வர்ணத்தையும் சாராமலே இருக்கும்..இவ்வாறு பல பிரச்சனைகள் உருவானதால் மனுஸ்மிருதி மூலம் தீர்வு காணப்பட்டது..

வர்ணக்கலப்பு;; அனுலோமர்////ப்ரிதிலோமர் என்று பிரித்து வர்ணம் இல்லாத சாதிகள் ஏற்படுத்தப்பட்டன. அந்த சாதிகளுக்குள்ளும் உட்பிரிவுகளாகப் பிரித்து,பிரித்து நூற்றுக்கணக்கான சாதிகள் ஏற்படுத்தப்பட்டன. இவர்கள் அனைவருமே சூத்திரர்களாகவும்,, சூத்திரர்களுக்கும் கீழானவர்களாகவும் பிரிக்கப்பட்டனர். இவ்வாறு பிரிக்கப்பட்ட அனைவரும் செய்ய வேண்டிய தொழில்களையும் பிரித்தனர்.

.{ எப்படி வர்ணங்களைப் பிரித்து தொழில்களை ஏற்படுத்தினரோ…...அதேபோல் சாதிகளைப் பிரித்து அவர்களுக்குரிய தொழில்களையும் ஏற்படுத்தினர்.அவற்றின் அடிப்படையில் தீட்டுடையவர்கள் என்றும் பிரித்து விட்டனர்..} 

சாதியைப் பிரித்த பின்னரே தொழில்களை ஏற்படுத்தினர்….மாறாக தொழிலை வைத்து
சாதிகளைப் பிரிக்கவில்லை. எனவே மனுஸ்மிருதியினால் சாதிகளும் அவர்கள் செய்யும் தொழிலும் பிரிக்கப்பட்டதால் மக்கள் வேறு தொழில் செய்ய அனுமதிக்கப்படவில்லை..

இதனால் சோதிடத்தில் உள்ள பொதுப்பலன்களைக் கூறும் பொழுது பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன..சாதகம் பெரிய அரசயோகமாக இருக்கும்.ஆனால் அவர் சாதியமைப்பில் அடிமை வேலை தான் பார்த்துக்கொண்டிருப்பார்…அரசயோகம் எல்லாம் வேலை செய்யாது…………………...அதேபோல் உருப்படாத மேல்சாதிக்காரர் சாதகமாக இருக்கும்.அவர் நல்ல சுக போகத்தில் இருப்பர்……………….. இதனாலேயே சாதிகளை அறிந்து பலனுரைக்க வேண்டும் என்றுள்ளது…. மற்றொருகாரணமும் உள்ளது இன்னமும் நமது மக்கள் அவரவர் சாதிக்குரிய தொழில்களைச் செய்வதைக்காண முடிகிறது….

இப்பொழுது சொல்லுங்கள் சோதிடப்பலன்கள் கூறுவதில் சாதியின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்று……  நமது இந்திய கிராமங்களில் வாழும் மக்களில் பெருவாரியானயனவர்கள் தங்களது சாதியத் தொழிலையும், சாதியத்திற்கான செயல்களையும் செய்து வருகின்றனர்.. எனவே இந்திய சோதிடவியலில் சாதிய அமைப்பைப் பார்த்து பலனுரைப்பது இன்றியமையாகிறது……….

மதம்:

உலகில் உள்ள மானுடர்கள் அனைவருக்கும் எதிர்காலப் பலன்களைக் கூறக்கூடியது சோதிடக்கலையாகும். எனவெ உலகில் மதத்தினர்க்கு ஏற்றாற்போல்பலன்களைஎடுத்துரைக்கவேண்டும்..ஒவ்வொரு மதத்தினரின்  செயல்கள்,தொழில்கள் போன்றவற்றை பிரித்து அறிந்து அவர்களுக்கு ஏற்றாற் போல் பலனுரைக்கவேண்டும்….  மதங்களுக்குரிய மாற்று விதிகளையும் அறிய வேண்டும்,,[சில மதங்களில் மாமிசம் சாப்பிடுவது புனிதமானது……….சிலமதங்களில் மாமிசம் சாப்பிடுவது தீட்டானது.} எனவே இவற்றின் பிரிவுகளை அறிந்து பலனுரைக்கவேண்டும்…மதத்தின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களுக்கு தகுந்தாற்போல் பலனுரைக்க வேண்டும்..

நிறபேதம்:
அய்யா….இலக்னத்தில் சனி இருக்கிறது என்று. அனவரையும் அழகற்றவர் என்று கூறக்கூடாது….அதேபோல் இலக்னத்தில் சுக்கிரன் இருக்கிறது என்று அழகானவர் என்றும் கூறமுடியாது….எனவே இவற்றை மற்ற அமைப்புகளான மேலே கூறியவற்றை கணக்கில் கொண்டு பலனை க்கூற வேண்டும்…இவை போல் பல்வேறு பொதுப்பலன்கள் உள்ளன. அவற்றையெல்லாம் நிறபேதத்தை அறிந்து பலன் காண வேண்டும்…….

யுக்தி :

சோதிடப் பலன்கள் கூறுவதில் அதிகமாக பயன்படுவது யுக்தியாகும்….இந்த யுக்தியானது எவரிடம் இல்லையோ அவரால் சோதிடப் பலன்களைக் கூறமுடியாது…பலன் கூறும் பொழுது..யூகம் என்பது கண்டிப்பாக வந்துவிடும்…

மேலே கூறப்பட்ட காலம், தேசம் போன்றவற்றை கணக்கில் கொண்டு சரியாக யூகித்து பலன்களைக் கூற வேண்டும்

சுருதி;

சோதிடப் பலன்களும்,,கணிதங்களும் கூறுகின்ற நூல்களாகும்..அல்லது விதிகளாகும். இவை கணக்கில் கொள்ள வேண்டுமே தவிர அப்படியே எடுத்துப்போட்டு பலன்களைக்கூற முடியாது..அனைத்து இடங்களிலும் 1+1= 2..என்கிற முடிவு வராது..அதனாலேயே இக்கலை முழுமையான அறிவியல் ஆக முடியாமல் உள்ளது….

பாரம்பரியம்,,கே.பி.,.சாரம்,மேற்கத்தியம், நாடி,, போன்ற அனைத்திலுமே பலன்களில் தடுமாறும் நிலையிருக்கும்…ஏனெனில் நாம் கண்டுபிடித்து கூறுகின்ற சில பலன்கள் நடைபெறாமலே போய்விடும்…அதனால் யூகித்து அறிந்து பலனைக்கூற வேண்டும்.

அனுபவம் ;

எங்கு பலன்களக்கூறுகிறோம், யாருக்கு கூறுகிறோம் எப்படி கூறுகிறோம்,,,என்ற அனுபவம் மிகவும் முக்கியமானதாகும். சனி தசா அனைத்து வயதினருக்கும் வரும்…எல்லொரும் நூலில் கூறியபடி பலன்களை அப்படியே அனுபவிக்க மாட்டார்கள்…துன்பம் என்பது ஒவ்வொரு நிலையிலும் மாறுபட்டதாகும்…அதனால் அனுபவம் கொண்டு பலனுரைக்க வேண்டும்…

அதேபோல் அனுபவத்தினால் எளிதாகப் பலன்களைக்கூற முடியும்.
எனவே

காலம்,தேசம்,,வர்த்தமானம்,சாதி,மதம்,நிறபேதம், யுக்தி,சுருதி,அனுபவம் தேவையென்றாலும் இவற்றில் முக்கியமாக சாதியம் வந்து விடுகிறது..

சமுதாயக்கலாச்சாரம் சாதியத்தையும்,,மதத்தையும் வைத்து ஏற்படுத்தியிருப்பதால் அவற்றின் அடிப்படையில் வாழும் மனிதர்களுக்கு பலன்களைக் கூறும் பொழுது அவர்களின் மதத்தையும்,,சாதியத்தையும் வைத்தே பலன் கூறும் நிலையில் சோதிடம் உள்ளது…

என்னதான் சாதிகள் இல்லையடி பாப்பா என்றாலும் இந்துவாகப் பிறந்தவர் அனைவரும் சாதிகளுக்குள் வந்து தான் ஆக வேண்டியுள்ளது……சாதிகள் இல்லையென்றால் இந்துமதமே இல்லை…..

இந்து சமயத்தின் அடிப்படை ஆணிவேரே சாதிய அமைப்பாகும்…….அதனால் சோதிடப் பலன்கூறுவதில் சாதியமைப்பு தவிர்க்க முடியாததாக உள்ளன…….
 
மிக்க நன்றி……

Professor.Dr.Vimalan…… 

04-01-2015.



Wednesday 31 December 2014

சோதிடத்தில் கோச்சாரப் பலன்கள் . 01-01-2015.

அன்புடையீர் வணக்கம்..மீண்டும் எனது பிளாகில் சந்திப்பதில்                    மகிழ்ச்சியடைகிறேன்.



ஆரியர்களின் வருகை ;
இந்திய சோதிட வரலாறு ஆரியர்களின் வருகைக்குப் பின்னர் தான் ஏற்படுத்தப்பட்டது. அதற்கு முன் வாழ்ந்த இந்திய மக்கள் சோதிடம் பார்க்கின்ற அறிவைப் பெறவில்லை. எனும்பொழுது, ஆரியர்களின் வருகை கி.மு.2000 என்று பொதுவாக வரலாற்று அறிஞர்களின் முடிவாக உள்ளது. 

இந்த ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்த உடன் இங்கிருந்த இறைவழி பாட்டு அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்தனர். அதுவே இந்து சமய வேதங்களை உருவாக்குவதற்கு காரணமாக அமைந்தது. அந்த வேதங்களில் முதலாவதாக உள்ள இருக்கு வேதத்தில் உள்ள இறை வழிபாட்டு மந்திரங்களைக் கூறுவதற்கு சில நேரங்களைக் கடைபிடித்தனர். அவை முகூர்த்தம்,திதி, ருதுக்கள்,கிரகணம்,பொன்றவற்றை பயன் படுத்தியுள்ளனர். இவை அடிப்படை வானசாத்திர அறிவைக் கொண்டதாகும். இந்த அறிவை எங்கிருந்து பெற்றனர்…நிச்சயமாக இந்த அறிவு இந்தியர்களுக்கு இல்லை. பின் எங்கிருந்து வானசாத்திர அறிவைப் பெற்றனர்……………

உண்மையில் ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்த குடியேற்றக் காரர்களாவர். அவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளின் தொடர்ச்சியான குடிப்பெயர்ச்சியினால் ஐரோப்பாவிலிருந்து ஒவ்வொரு நதிசார்ந்த நாடுகளில் குடிபெயர்ந்தனர். அவ்வாறு குடிபெயர்ந்ததில் மிகவும் முதன்மையானதாக இந்தோ-ஈரானிய கலாச்சாரத்தை எடுத்துக்கொள்ளலாம். தற்பொழுது உள்ள ஈராக்கின் பாக்தாத் நகரை மையமாகக் கொண்டு அதைச் சுற்றி நான்கு திசைகளிலும் உள்ள நிலங்களை நாடுகளைக் கணக்கில் கொள்ளலாம். 

ஐரோப்பியர்கள்குடிபெயர்வதற்குமுன்னரேஇப்பகுதியில்சுமேரியர்கள், மெசபதோமியர்கள்,அக்கேடியன்கள், போன்ற இனத்தவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் அடிப்படை வானசாத்திரத்தை அறிந்து வைத்துள்ளனர். பின்னர் வந்த ஐரோப்பியக்குடியேற்றக்காரர்கள் அவற்றை அறிந்துள்ளனர். பின்னர் அப்பகுதியில் வாழ்ந்த  அசீரியர்கள், பாபிலோனியர், சால்தியர்கள் போன்ரோர் வானசாத்திரத்தையும், அதன் மூலம் பலனாகக் கூறப்படும் கலைகளையும் அறிந்துள்ளனர்.

உலகின் எவருக்கும் இல்லாத சிறப்பு சால்தியர்களுக்கு உண்டு. இவர்கள் பாரசீக வளைகுடாப் பகுதியில்யூப்ரடீஸ், டைகிரீஸ் நதிகளின் முகத்துவாரத்தில் வாழ்ந்தவராவர். அதனால் வானத்தில் ஏற்படும் கோள்கள்,நட்சத்திரங்களின் மாற்றங்களை எளிதாக வெறும் கண்களைக் கொண்டு கணிக்கக் கூடியவர்களாக இருந்தனர்.அதனாலேயே தொடர்ச்சியான இரண்டாயிரம் ஆண்டுகள் வானத்தை ஆய்வு பல்வேறு முடிவுகளை அறிவித்துள்ளனர். அவர்களே சோதிட சாத்திரத்தின் முன்னோடிகளும் ஆவர்.

சோதிடத்தோற்றம்.
மிகவும் தெளிவாக கோள்களைக் குறித்து ஆய்வு செய்து அவற்றிற்கான பண்புகளை வெளியிட்டனர். பூமிக்கு வெளிவட்ட கோள்களான சனி,குரு,செவ்வாய், உள்வட்ட கோள்களான சூரியன், சுக்கிரன்,புதன். சந்திரன்,ஆகிய ஏழு கோள்களயும் கண்டுபிடித்து பலன்களைப் பார்த்தனர்.
சனி………………………………..துன்பம்
குரு………………………………..நன்மை
செவ்வாய்………………போர்குணம்
சூரியன்……………………..நிர்வாகம்
சுக்கிரன்………………….பெரும் விளைச்சல்
புதன் …………………………எழுத்து
சந்திரன்………………… வேளாண்மை.       ஆகிய அடிப்படை குணங்களைக் கொண்டு பலன்கள் பார்க்கப்பட்டன.

மேலே கூறப்பட்டுள்ள கோள்களின் வரிசைப்படி ஒரு நாளின் ஒவ்வொரு காலத்திற்கும் பலன்கள் பார்த்துள்ளனர். தற்பொழுது நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோமே ஹோரா நேரம்  என்று. இதுவே சோதிடப்பலன்கள் பார்க்கப்பட்டதற்கு அடிப்படை நிலைகளாகும். இவற்றை ஏற்படுத்தியது சால்தியர்கள் ஆவர். பின்னர் படிப்படியாக இந்திய சோதிடத்திலும் இடம் பெற்றது.
சால்தியர்களின் சோதிடம், வானசாத்திரம் அக்கால வழக்கில் மிகவும் பிரபலமாக இருந்துள்ளது. 

அதனாலேயே புனிதர் இயேசு அவர்கள் பிறந்ததற்கு இவர்களே சாட்சி பகர்ந்ததாக விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது. பழைய பைபிளில் பார்க்க வேண்டும். மத்தேயு;2-2.கிழக்கில் இருந்து வந்த சோதிடர்கள் சாட்சி கூறினர். பிறந்திருப்பது தேவகுமாரன் என்று எழுதப்பட்டிருக்கும். ஜெருசலத்திற்கு கிழக்கில் உள்ள நாடு சால்திய,பாபிலோனியாவாகும்.

எனவே முதலில் ஒவ்வொரு நேரங்களுக்குப் பிரித்து பலன் பார்க்கப்பட்டதிலிருந்து பலவேறு முறைகள் கண்டுபிடிக்கப் பட்டு சோதிடம்,,,, உலகம் முழுவதும் பரவியது. இவையெல்லாம் கி.மு2000திலிருந்து கி.மு 001வரைக்கும் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால்  கி.மு 2000ல் அங்கிருந்து இங்கு வந்த ஆரியர்கள் தொடக்கால வானசாத்திரத்தையும் அதற்குரிய பலன்களையுமே ஏற்படுத்தியுள்ளனர்.



கோச்சார கோள்களின் பலன்கள்;
இந்திய சோதிடத்தில் கோச்சாரக் கோள்களைக் கொண்டு பலன்கள் பார்க்கும் முறை தொடக்கதிலிருந்து வந்துள்ளது. முதன் முதலில் கோள்களின் கோச்சாரப் பலன்கள கிரகணத்திற்கே பார்க்கப்பட்டன. ஏனெனில் கிரகண காலத்தில் ஏற்படும் இயற்கை குழப்பங்களைக் கண்டு அஞ்சியாதால் கவனமாக கிரகண காலங்கள் கண்டு பிடிக்கப் பட்டு முன்னெச்சரிக்கையாக செயல்பட்டனர்.
அதன் பின்னர் ஒவ்வொரு கோள்களிற்கும் பண்புகள் கொடுக்கப்பட்டு பலன்கள் பார்க்கப்பட்டன.

பொதுவாக அக்காலங்களில் தனிமனித சாதகம் எழுதும் அளவிற்கு சோதிடசாத்திரம் வளரவில்லை.அதனால் தனிப்பட்ட மக்களுக்கு சோதிடப்பலன்கள் பார்க்கப் படவில்லை. ஆனால் ஒவ்வொரு அரச வம்சத்தினரும் தங்கள் குலத்திற்கு என்று ஒரு நட்சத்திரத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அக்குல நட்சட்த்திரத்தில் நற்கோள்கள் வந்தால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று சோதிடவியல் பலனாகக் கூறப்பட்டது. அதேபோல் தங்கள் குலத்திற்கான நட்சத்திரத்தில் தீயகோள்கள் வந்தால் அந்த அரச குலத்தினர்க்கு தீய பலன்கள் நடைபெறும் என்று சோதிடப் பலனாகக் கூறப்பட்டது. இதுவே கோச்சாரப் பலன் பார்ப்பதற்குரிய முறையாக இருந்தது.

பின்னர் தனி மனிதன் பிறந்த நட்சத்திரம் கணிக்கத் தெரிந்த பிறகு அவருடைய நட்சத்திற்கு கோச்சாரக் கோள்களின் பெயர்ச்சிக்குரிய பலன்கள் பார்க்கப்பட்டன. {{{{{{சாதகங்கள் எழுதாத காலங்கள்.}}}}}}} ஆதலால் வெறும் கோச்சாரக் கோள்களைக் கொண்டே எதிர்காலப் பலன்கள் பார்க்கப் பட்டன.
பின்னர் இராசிமண்டலங்களைக் கொண்டு அவற்றில் கோள்கள் இருந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்று சோதிடப்பலன்கள் கூரும் நூல்கள் உருவாக்கப்பட்டன.

இவற்றிலும் கோச்சாரப்பலன்கள் பார்க்கும் முறையின் வளர்ச்சியில் அஸ்டவர்க்கப்பலன்கள் கணிதங்கள் ஏற்படுத்தப் பட்டன. அவற்றைக் கொண்டு எதிர்காலப் பலன்கள் பார்க்கப்பட்டன. {அதாவது கோள்கள் அடுத்த இராசிக்கு செல்லும் வரை உள்ள நாட்களுக்குப் பலன்கள் பார்க்கப்பட்டன.}

இங்கு நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். எதிர்காலப் பலன்களைக் கூறும் சரியான தசா,புத்தி முறைகள் ஏற்படுதப்படவில்லை. அதனால் கோச்சார அடிப்படையில் எதிர்காலபலன்கள் பார்க்கப்பட்டன.

கோச்சாரப் பலன் கூறும் முறை வெறும் சந்திரன் ஒரு கோளை மட்டும் மையப்படுத்தி பார்க்கும் முறையாக மாறியுள்ளது. இக்கோச்சாரப் பலன்களில் மற்ற எந்த கோளும் இடம் பெறாது. தனி மனித சாதகமும் தேவையில்லை என்றாகிறது. எனும் பொழுது உலகில் உள்ள ஒரு இராசியில் சுமார் 65 கோடி மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் அனைவருக்குமான பலன்களாகும்` மிகவும் பொதுவானதும் அனைவருக்கும் பொருந்தாத பலன்களாக உருவாகும். எனவே தான் தனிமனித சாதகம் எழுதிய பின்னர் சந்த்ரன் ஒருவனை மட்டும் மையப்படுத்திக் கூறும் கோச்சாரப் பலன்கள் எந்த அளவு வேலை செய்கிறது என்று வினா எழுகிறது.    

உண்மையில் நன்கு சோதிடம் அறிந்த அன்பர்கள் ஒருவருடைய சாதகத்தின் அடிப்படையில் எடுக்கும் முடிவிற்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை கோச்சாரப் பலன்களிற்கு கொடுக்கமாட்டார். வேண்டுமானால் வாடிக்கையாளர் கேட்பதற்காக கூறலாமே தவிர அவரது மனசாட்சி இடம் கொடுக்காது.

எதிர்காலப் பலன்களை வரையறுப்பதில் 95 விழுக்காடு தனி மனித சாதகத்தின் கோள்களின் நிலைகளும்,தசா.புத்திகளுமே தீர்மானிக்கும். நிச்சயமாக கோச்சாரக் கோள்களின் {சந்திரன் மட்டும்} பலன்கள் சாதாரண நிலையிலேயே பலனளிக்கும்.


தனி மனித சாதகம் இல்லாமல் ,{ பிரஸ்னம் போன்ற }  பலன்கள் கூறும் முறையை நான் கூறவில்லை. ஏனெனில் அவை முழுவதுமாக சாதகம் எழுதி பார்க்கும் அமைப்பாகும்.


தற்பொழுது அருமையான கணிதங்கள் நம்மிடம் உள்ளன. அதைக்கொண்டு ஒரு சாதகரின் எதிர்காலப் பலன்களைத் தெளிவாக எடுத்துக் கூறமுடியும். இவற்றில் சந்திரனை மட்டும் மையப்படுத்தும் கோச்சாரப் பலனைக் கருத்தில் கொள்ளாமலே பலன்கள் கூறமுடியும். எனவே கோச்சாரப் பலன்களை சாதாரண நிலையிலேயே வைத்துக் கொண்டால் தேவையற்ற குழப்பங்களுக்கு வழி ஏற்படாது.


விம்சோத்தரி தசா அமைப்பில் ஒன்பது கோள்களும் பங்கு கொள்கின்றன. அவற்றின் கோச்சார நிலைகளைக் கொண்டு பலன்களைக் கூறலாமே தவிர தனிப்பட்ட சந்திரனை மட்டும் மையப்படுத்தும் பிறந்த இராசிப் பலன்களை சாதாரணமாகக் கொள்வோம்.    நன்றி..நன்றி….

MY BEST WISHES IN 2015 CHRISTIAN ERA…..

WITH REGARDS
PROFESSOR. DR. VIMALAN

01-01-2015..COIMBATORE.

Sunday 28 December 2014

தீய தோசங்களும் விலகாது----நல்லயோகங்களும் விலகாது.--28 / 12 / 2014.

அன்புடையீர் வணக்கம். எனது இணையதளத்தில் திரும்பவும் தங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
சமீப நாட்களாக எனது பரிகாரத்திற்கு எதிரான கருத்துக்கள் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகிறது. அவற்றை விளக்கும் கடமையில் எனது முடிவுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சோதிடம் என்பது பல்வேறு அடிப்படை விதிகளை ஏற்படுத்தி எதிர்காலப் பலன்களை எடுத்துரைக்கும் கலையாகும். இவற்றில் தீய தோசங்களும். நல்ல யோகங்களும் பலன்களாகக் கூறப்படும்.
தீய தோசங்களை அனைத்துக் கோள்களும்,பன்னிருபாவகங்களும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அதேபோல் நல்ல யோகங்களை அனைத்துக் கோள்களும், பன்னிருபாவகங்களும் ஏற்படுத்தும். இவையும் சோதிடப் பலன்கள் கூறுவதற்குரிய அடிப்படைக் கட்டமைப்பாகும்.

தீய தோசங்கள்.
சோதிடத்தில் உள்ள ஒன்பது கோள்களை மட்டும் எடுத்துக் கொள்வோம். இவற்றில் சூரியன்,செவ்வாய்,சனி,இராகு,கேது ஆகிய ஐந்து கோள்களும் இயற்கைத் தீய கோள்களாகும். 
சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கோள்களும்[ இவர்களுக்குள் இணைந்திருந்தால் நற்கோள்களாகும். குருக்கோளுடன் இணைந்தாலும் நல்லவர்கள் ஆவர். ஆனால் இயற்கைத் தீய கோள்களுடன் இணைந்தால் தீயவர்களாவர் } இருநிலைக் கோள்களாகும். 
குரு  ஒருவர் மட்டுமே இயற்கை நற்கோளாகும். 
எனவே சோதிடத்தில் தீய கோள்களின் ஆதிக்கமே கூடுதலாக இருக்கும். இவற்றைக்கொண்டு பன்னிரு பாவகத்தையும் இணைத்து பலநூறு தோசநிலைகளை உருவாக்கி அதற்குரிய பலன்கள் தெளிவாக கூறப்பட்டுள்ளன.

இந்த தீய நிலைகளையே தோசங்கள் என்று அழைக்கப்படுகின்றன.     

நல்லயோகங்கள்;
தீய கோள்களும், தீயபாவங்களும் இணைந்து சில நல்ல யோகங்களை ஏற்படுத்தியுள்ளனர். தீயகோள்களும், நல்லபாவகங்களும் இணைத்து நல்லயோகங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
 அதேபோல் நற்கோள்களும் ,நல்லபாவகங்களையும், --நற்கோள்கள்,தீயபாவகங்களையும்,இணைத்து நல்லயோகப்பலன்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
தீயகோளும்,நற்கோளும் இணைந்து நல்லபாவகத்தில் இருந்தும்---தீயகோளும்,நற்கோளும் இணைந்து தீயபாவகத்திலிருந்தும் நல்ல யோகப்பலன்களை ஏற்படுத்தியுள்ளனர். 
இவ்வாறு அடிப்படை விதிகளை உடைக்காமல் சோதிட சாத்திரத்தில் பல்வேறு நல்ல யோகங்களும், தீய தோசங்களும் எழுதப்பட்டுள்ளன.

பலன்களின் நிலை;
இந்த நல்லயோகங்களூம், தீயதோசங்களும் ஒருவருடைய சாதகத்தின் எதிர்காலப் பலன்களைத் தீர்மானிப்பதில் முதன்மையான பங்கு வகிக்கிறது. இதில் ஒருவருடைய சாதகத்தில் நல்ல யோகங்களைக் கூறும் கோள்கள் அமைப்பு கூடுதலாகவும், தோசங்களைக் கூறும் கோள்கள் அமைப்பு குறைவாகவும் இருந்தால், அச்சாதகம் நல்ல யோகமான சாதகமாகும். ------------------
அதேபோல் நல்ல யோகங்களைக் கூறும் கோள்கள் அமைப்பு குறைவாகவும், தோசங்களைக் கூறும் கோள்கள் அமைப்பு கூடுதலாகவும் இருந்தால், அச்சாதகம் தோசசாதகமாகும்.

எனவே ஒரு சாதகம் நல்ல யோகங்களுடனும் ,தோசங்களுடன் தான் பிறக்கின்றன. இதனால் தோசமில்லாத சாதகம் உலகில் இல்லை. அதேபோல் நல்ல யோகமில்லாத சாதகமும் இல்லை.

இந்த தோசங்களும், நல்லயோகங்களும் எப்பொழுதும் இருந்து கொண்டேயிருக்கும். இவை எப்பொழுது பெரிதாக வெளிப்படும் என்ற வினா எழுகிறது. அனைத்து செயல்களும் பிறந்ததிலிருந்து தொடங்குகிற தாசா.புத்திகள்,அந்திர,சித்திர,சூட்சும,பிராணங்கள் தீர்மாணிக்கின்றன. இத்தசா,புத்திகள்.பன்னிருபாவங்களுடன் செயல் படும் பொழுது அவற்றிக்கு ஏற்றவாறு கூடுதலாகவோ அல்லது குறைவாக வெளிப்படுகிறது.
இச்செயல்களில் நல்லயோகங்கள் எவ்வாறு நற்பலன்களை வழங்குகிறதோ ,அதேபோல் தீயநிலைகள் தீய பலன்களை வழங்கும். இதுவே சோதிடத்தின் நிலையாகும்.

இவற்றில் தீயபலன்களைக் குறைப்பதற்கு பரிகாரச்செயல்கள் செய்தால் சரியாகிவிடும் என்றால் ,நற்பலன்களைக் குறைப்பதற்கு ஏதாவது பரிகாரச் செயல்கள் கூறப்படவேண்டும் . அப்படியெல்லாம் இல்லை.
சோதிடம் பலன்களைக் கூறுவதோடு நிறுத்திக் கொள்கிறது. அதற்கு மாற்றாக பரிகாரத்தை கூறினால் முன்னர் கூறிய சோதிடப்பலன்கள் பொய்யாகிவிடும். எப்பொழுதும் சோதிடம் பொய்யுரைப்பதில்லை. எதிர்காலத்தில் எது நடக்குமோ அதை தெளிவாகவே கூறுகிறது.   எனவே பரிகாரத்தை கூறினால் சோதிடப்பலன்கள் பொய்யாகிவிடும். பரிகாரம் இல்லையென்றால் சோதிடப்பலன்கள் உண்மையாகும்.   

பரிகாரம் என்பதெல்லாம் உலகச்சமயங்களின் இன்றியமையாத செயல்களாகும்.  எப்பொழுதும் மானுடம் பாவம் செய்து கொண்டேயிருக்கின்றன. அப்பாவங்களைப் போக்கும் அமைப்பில் இறை வழிபாடுகளைச் செய்யச் சொல்லி மானுடத்தை வாழ்வியல் பற்றுடன் செயல்பட வழிசெய்கிறது. நம்பிக்கை அடிப்படையானது.

ஆனால் சோதிடம் பாவத்தை போக்கும் வழிசொல்லும் கலையில்லை. இவை ஒருவர் பாவம் செய்வார்,அல்லது நல்லது செய்வார் என்று மட்டும் தான் கூறுகிறது. அதேபோல் நல்லது நடக்கும் அல்லது தீயது நடக்கும் என்று கூறுகிறது.வேறு ஒன்றும் சொல்லவில்லை. 

மாறாக பரிகாரத்தை சோதிடம் கூறுகிறது என்றால், அக்கூற்று அனைத்தும் சோதிடத்தை பொய்யாக்குவதாகும். எனவே சோதிடம் எதிர்காலத்தை உரைப்பதால் இங்கு பரிகாரத்திற்கு வேலையில்லை.
எந்தப் பரிகாரத்தினாலும் தோசங்களைக் குறைக்க முடியாது. தோசங்கள் அனைத்தும் அனுபவித்து முடிக்க வேண்டியதாகும்.

அனைத்து பலன்களையும் ஏற்றுக் கொள்ளச் செய்வதே சோதிடத்தின் கடமையாகும். [ ALL ACCEPTANCE ]

நல்ல யோகங்களை எப்படி விலக்க முடியாதோ ,அதேபோல் தீய தோசங்களையும் விலக்க முடியாது………..


மிக்க நன்றி…………………….PROFESSOR. VIMALAN.    28-12-2015.

Friday 12 December 2014

வேதகால முகூர்த்தங்களும் - தற்கால முகூர்த்தங்களும் -ஒரு பார்வை. 12-12-2014.

வேதகால முகூர்த்தங்களும், தற்கால முகூர்த்தங்களும்- ஒரு பார்வை.

இந்து சமய வேதங்களில் கூறப்பட்டுள்ள இறை வழிபாட்டுச் சடங்குகள், வேள்வி இயற்றி அக்னி சாட்சியாகச் செய்யப்படுவதாகும். இவற்றிற்கு பொதுவான காலங்களூம், குறிப்பிட்ட முகூர்த்தகாலங்களும் தேர்ந்தெடுக்கப் பட்டு வழிபாடுகள் நிறைவேற்றப்பட்டன.
பொதுவாக அனைத்து வழிபாடுகளும் பகலில் சூரிய உதயத்திலிருந்து, நடுப்பகலிற்குள் செய்யப்படவேண்டும். இது பொதுவிதியாகும்( உண்மையில் பிரம்ம முகூர்த்தம் என்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னர் செய்யப் படும் சடங்குகள் முகூர்த்த சாத்திரத்தில் கூறப்படவில்லை.). வேதகாலத்தைப் பொறுத்தவரை பகலிலேயே சடங்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தொடக்கத்தில் திதியை (திதி என்பதே தற்காலத்தில் தேதி என்று மாறியுள்ளது.) கொண்டு வழிபாடுகள் செய்யப்பட்டு வந்தன. பின்னர் கால வளர்ச்சியினால் முகூர்த்தங்கள் கண்டு பிடிக்கப்பட்டு அதன் வழியாக சடங்குகள்,வழிபாடுகள் நிறை வேற்றப்பட்டன.
வேதகால முகூர்த்தப் பெயர்கள்:

பகலிறவு கொண்ட ஒரு நாளுக்கு முப்பது முகூர்த்தங்கள் ஏற்படுத்தப் பட்டன. இவற்றில் வளர்பிறை பதினைந்து நாட்களுக்கு தனியாகவும், தேய்பிறை பதினைந்து நாட்களுக்கு தனியாகவும் முகூர்த்தங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

வளர்பிறை முகூர்த்தப் பெயர்கள்      தேய்பிறை முகூர்த்தப்பெயர்கள்
பகல் --------        இரவு                      பகல் ----------- இரவு             
சித்ர             தாதா                 சவிதா             அபிசாஸ்தா
ஹேது           ப்ரதாதா              ப்ரசவிதா           அனுமந்தா
பிரபான்          அனந்த               தீப்த               அனந்த
அபான்             மோத                திபயன்             மோத
ஸம்பான்           ப்ரமோத             திப்யமான          ப்ரமோத
ஜ்யோதிஸ்மான்    அவெஸன்           ஜ்வலன்           அஸாதயன்
தேஜஸ்வான்       நிவெஸயன்         ஜ்வலிதா           நிசாதயன்
அதபான்            ஸம்வெஸன்        தபான்            ஸம்ஸாதன்
தபான்              ஸம்ஸன்தா        விதபன்           ஸம்ஸன்னா
நபிதபான்           ஸன்தா             ஸன்தபன்          ஸன்னா
ரோகன             அபவன்              ரோகன            அபூ
ரோகமான          பிரபவன்            ரோகமான           விபூ
சோபன            ஸம்பவன்           ஸம்பூ               ப்ரபூ
சோபமான         ஸம்பூத              சும்பமான           ஸம்பூ
கல்யாண          பூத                  வாம                புவ.

 ஆகியவை வேதகால முகூர்த்தப் பெயர்களாகும்.

வேத காலத்தில் இராசிகள், பாவகங்கள் கண்டுபிடிக்கப்பட வில்லை. ஆதலால் ஒரு நாளினை முப்பது பிரிவாக பிரித்து காலத்தை கணித்துள்ளனர். தற்பொழுது கணிக்கப்படும் நாழிகை, மணிகள் எல்லாம் அப்பொழுது இல்லை. அப்பொழுது காலத்தைகுறிக்கும் சொல்லாக முகூர்த்தம் என்றுள்ளது. இவற்றில் நல்லமுகூர்த்தகாலமென்றும் ,தீய முகூர்த்தகாலமென்றும் பிரித்து பார்த்து செயல்களைச் செய்துள்ளனர். 

தற்காலக் கணிதப்படி வேதகால முகூர்த்த காலத்தின் அளவு நாற்பத்துயெட்டு நிமிடங்களாகும்.(இரண்டு நாழிகைகளாகும்.) மேலே குறிப்பிடப்பட்டுள்ள முப்பது முகூர்த்தப்பெயர்களில் நல்ல முகூர்த்தங்களும், தீய முகூர்த்தங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த முகூர்த்தம் பார்க்கும் அமைப்பு வேதகாலத்திற்குப் பின்னர், இதிகாசம்,புராணகாலம்,கிருஹ்ய ஸூத்ரகாலங்களிலும், மனு ஸ்மிருதி, யக்ஞவல்கிய ஸ்மிருதி காலங்களிலும் பயன் படுத்தப்பட்டுள்ளன. பின்னர் இராசிகளும்,பாவகங்களும் கண்டுபிடிக்கப்பட்டபின், இப்பெயருடன் கூடிய முகூர்த்த காலங்கள் கைவிடப்பட்டன.

தற்கால முகூர்த்தங்கள்

தற்கால முகூர்த்தம் என்பது ஏறத்தாழ 1000 ஆண்டுகள் வளர்ச்சியாகும். முகூர்த்தவிதிகளில் கூறப்பட்டுள்ளபடி ஒரு நல்ல காலத்தை தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் அரிதானதாகும். எண்ணிலடங்காத முகூர்த்த விதிகள் எழுதப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் குறிப்பிட்டால் பல நூல்கள் எழுத வேண்டியது இருக்கும். இருப்பினும் முகூர்த்த விதிகளை தேர்ந்தெடுப்பதற்கு உரிய சில காரணிகளை இங்கு குறிப்பிடுகிறேன்.

திதி. நட்சத்திரம், வாரம், யோகம்,கரணம்,அமிர்தாதி யோகங்கள்,இலக்னம், பாவகம்,கோள்கள்நிலை,தியாஜ்யங்கள்,நேத்திரம்,ஜீவன்,வாரசூலை,யொகினி, தனியநாள்,கரிநாள்,இலத்தை,திரிதினஸ்பிர்க்கு,அவமாகம்,மேல்நோக்குநாட்கள்.கீழ்நோக்கு நாட்கள்,சம நோக்குநாட்கள்,இராகுகாலம்,எமகண்டம், கௌரி பஞ்சாங்கம்,பஞ்சகம்,போன்றவை தற்போது பயன்படுத்துவதாகும். 

பயன்படுத்தாத முகூர்த்தவிதிகள் நூற்றுக்கணக்கில் நூல்களில் உள்ளன.அவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால் ஒரு முகூர்த்த நேரத்தை தேர்ந்தெடுப்பது என்பது இயலாத செயலாகும்.
எனவே மேலே குறிப்பிடப்பட்ட விதிகளில் முதன்மையானவற்றை தேர்ந்தெடுத்து செயல்களைச் செய்யலாம்.

முகூர்த்தநேரம் என்பது குறிப்பிட்ட செயலிற்கு இடையூறு வருவதை தடுக்குமே தவிர, செயலின் எதிர்காலத்தன்மையை வெளிப்படுத்தாது.

அனைத்து எதிர்காலப் பலன்களும் அவரவரின் சாதகப்படியே நடைபெரும்.              

மிக்க நன்றி.

Professor. Dr.T.Vimalan.   12-12-2014.


Friday 5 December 2014

தமிழகப் பல்கலைக் கழகங்களில் சோதிடவியல் துறை. சிறு விளக்கம்.

அன்புடையீர் வணக்கம். திரும்பவும் உங்கள் அனைவரையும்  சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
 தமிழகப் பல்கலைக் கழக சோதிடவியல் துறை  வரலாறு என்பது கி.பி 2002 ல் இருந்து தொடங்குகிறது. கி.பி.2001ல் இந்திய வரலாற்றில் சோதிடத்திற்கு என்று பல்கலைக் கழக மானியக்குழு ஒரு சிறப்பான முடிவைஎடுத்தது. என்னவெனில் இந்தியப் பல்கலை கழகங்களில் சோதிடவியல்பாடமாக வைக்கப்பட்டு சோதிடவியல்துறை தொடங்க ஆணையிடப்பட்டது. பதினாறு பல்கலைக்கழகங்களுக்கு மானியமாக ரூபாய் 15,00,000 (பதினைந்து இலட்சம்) வழங்கப் பட்டது. ஒரு பேராசிரியர், ஒரு இணைப் பேராசிரியர், இரண்டு விரிவுரையாளர்கள், இரண்டு அலுவலக உதவியாளர்கள் நியமித்துக் கொள்ளலாம் என்று அறிவித்தது. அவர்களுக்குரிய சம்பளம் பல்கலைக்கழக மானியக்குழுவே கொடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் தமிழகத்தில் இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு மானியம் வழங்கியது என்பது எனக்குத்தெரிந்த தகவலாகும். ஒன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.மற்றொன்று தஞ்சை சாஸ்த்ராப் பல்கலைக் கழகமாகும். 
இவற்றில் தஞ்சை ஸாஸ்த்ராப் பல்கலைக் கழகமே சோதிடவியல் துறையைத் தொடங்கியது.

மதுரை காமராசர் பல்கலைக் கழகம் தனக்கு சோதிடவியல் துறைத் தேவையில்லை என்று மானியக்குழு கொடுத்த பணத்தை திருப்பியனுப்பியதாக பின்னர் அறிந்து கொண்டேன்.

கி.பி 2002ல் தஞ்சை சாஸ்த்ராப் பல்கலைக்கழக துணைவேந்தர் மாண்புமிகு. ரா. சேதுராமன் அவர்களின் ஆணைப்படி சோதிடவியல் துறைக்கு திரு தி. விமலனாகிய எனக்கு விரிவுரையாளர் பதவி கொடுத்து பாடப்பிரிவுகளைத் தொடங்கச் செய்தார். அந்த நாள் தமிழக சோதிடவியல்துறை வரலாற்றிலும் எனது வாழ்விலும் அழியாத புகழை ஏற்படுத்தியதாகும். சோதிடவியல் துறையின் முதன் முதலில் ஊழியம் பெற்றவனாக பாக்கியம் பெற்றேன். அங்குதான் உலகத்திலேயே மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை சோதிடவியல் பாடப்பிரிவு தொடங்கப்பட்டது. அதை நடத்துவதற்கு வாய்ப்பளித்த ஸாஸ்த்ராப் பல்கலைக்கழகத்தினர்க்கு என்றென்றும் நன்றியுடையவனாவேன்.

இதே 2002ல் ஆந்திரா பொட்டி ஸிரி ராமுழு பல்கலைக் கழகத்தில் முதுகலை சோதிடவியல் பாடப்பிரிவு தொடங்கப்பட்டது.

2007ல் தஞ்சை சாஸ்த்ராப்பல்கலையில் முதுகலை சோதிடவியல் பாடப்பிரிவும் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

பின்னர் 2009ல் கோவை கற்பகம் பல்கலைக் கழகத்திற்கு சோதிடவியல் துறையை ஏற்படுத்தி முதன் முதலில் அறிவியல் ரீதியான பட்டப்படிப்புகளை தொடங்கினேன். கற்பகம் பல்கலைக் கழகத்தின் வேந்தர் மாண்புமிகு டாக்டர். வசந்த குமார் ஐய்யாவின் உத்தரவின் பெயரில் எனக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. Diploma, B.A., B.Sc., M.A., M.Sc. ,M.Phil., Ph.D. போன்ற அனைத்து பாடப்பிரிவுகளிலும் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இச்சோதிடவியல் துறைக்கு பேராசிரியராகவும், இயக்குனராகவும், தலைவராகவும் செயலாற்ற வாய்ப்பளித்த கற்பகம் பல்கலைக் கழகத்தினர்க்கு நன்றி உடையவனாகிறேன்.

ஏறத்தாழ 5000 நபர்கள் இதுவரை பட்டம் பெற்றிருப்பார்கள். இவை தவிர மற்ற பல்கலையில் எவ்வாறு சோதிடவியல்துறை இயங்குகிறது என்று எனக்கு தெரியவில்லை. இதுவே சோதிடவியல் துறையின் சுருக்கமான வரலாறாகும்.


( ஒரு சிலர் மதுரை காமராசர் பல்கலையில் சோதிடவியல் துறை இருந்ததாக கூறுவதாக கேள்விப்பட்டேன். அப்படியெல்லாம் ஒரு அதிர்ஸ்டம் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. அங்கு சோதிடவியல் துறையும் இல்லை.  சோதிடவியல் பேராசிரியர் என்று எவரும் இருந்ததில்லை. அங்கு இருந்தது சாதாரண டிப்ளமோ பாடப்பிரிவு ஆகும். அதுவும் தொலை நிலைக்கல்வியில் ஓராண்டு படிப்பாகும்.  தமிழகத்தில் உள்ள 20 நபர்கள் இப்பாடப்பிரிவை நடத்தியுள்ளனர். அதில் நானும் ஒருவனாவேன். எங்கள் அனைவருக்கும் பத்துமணி நேர வகுப்பிற்குரிய பணம் மட்டுமே கொடுக்கப்பட்டது. வேறு எங்களுக்கும் பல்கலைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. எங்களைப்போலவே பல்கலையில் வெவ்வேறு துறையில் பணி செய்த ஊழியர்களும் பாடம் எடுத்துள்ளனர். நான் 1993/1994ல் டிப்ளோமோ படிப்பிற்கு தேர்வு எழுதத்தான் சென்றேன். ஏனெனில் மூன்று பாடங்களும் அடிப்படை சார்ந்ததாகும். வேறு எவரையும் அப்பொழுது தெரியாது. பின்னர் 1996ல் இப்பாடப்பிரிவை சோதிடம் தெரிந்தவர்கள் பாடம் எடுக்கலாம் என்று அறிந்து வாய்ப்பு கேட்பதற்கு சென்றேன்.
 அப்பொழுது அங்கு பல்கலை அலுவலராகப் பணியாற்றிய திரு. மாரிமுத்து( Non-Teaching staff) என்பவரை சந்திக்க நேர்ந்தது. அவரிடம் கேட்டபொழுது வடமொழித்துறை பேராசிரியர் டாக்டர், வீர ராகவன் அவர்களை பார்க்கச்சொன்னார். திருவீரராகவன் அவர்களைப் பார்த்தபின்னரே பல செய்திகள் அறியும் வாய்ப்பு ஏற்பட்டது. 
முதலில் சோதிடவியல் துறை என்று ஒன்று இல்லை என்பது புரிந்தது. பின்னர் பாடம் எடுக்க அனுமதிக்கப்பட்டேன். இதை பெருமையாகக் கூற முடியவில்லை. ஏனெனில் வெறும் டிப்ளோமோ பாடத்திட்டத்தை எந்த பிரிவிலும் தொடங்கலாம் என்றும் அதற்கு துறை என்று ஒன்று தேவையில்லை என்பதும் அறிந்து கொண்டேன். இப்பாடத்தைப் படிப்பதால் எதிர்காலத்தில் என்ன பயன் ஏற்படப்போகிறது என்ற ஐயமும் இருந்தது. சோதிடவியல் படிப்பதற்கு மாணவர்கள் அதிகம் வந்தாலும், எங்களை, மற்ற துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் கண்டு கொள்வதேயில்லை. அவர்கள் கொடுக்கும் பணம் பற்றாக்குறை தான் இருப்பினும் பாடம் எடுத்தோம் . 
மொத்தம் ஐந்து ஊர்கள், ஒரு ஊருக்கு மூன்று சனி,ஞாயிறு. ஆக ஒரு ஆண்டிற்கு  ஐந்து ஊர்களில் 30 நாட்கள் மட்டும் வகுப்புகள் எடுப்போம். மற்ற நாட்களில் எங்களது வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவோம். மற்ற செய்திகள் பதிய முடியவில்லை. நன்றி.) நிறையக் கூறலாம். தேவையில்லை என்று முடிக்கிறேன்.

குறிப்பு: எனது மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ! என்னை விமர்சனம் செய்ய வேண்டாம். உங்களைப் பற்றியும் உங்கள் திறமைகளைப்பற்றியும் மற்றவர்களைவிட எனக்கு நன்கு தெரியும். உங்கள் பணியை நீங்கள் செய்யுங்கள். எனது பணியை நான் செய்கிறேன். நான் உங்களுக்கு கற்றுக்கொடுத்த ஒரு சிறு பகுதியை பொது மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். ஏனெனில் சோதிடம் என்ற கடல் குப்பைகளால் சூழப்பட்டு மக்களை ஏமாற்றும் கலையாகமாறி வருகிறது. அதில் கொஞ்சமேனும் வெளியேற்ற முடியும் என்ற நம்பிக்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் என்னால் முடிந்த அளவிற்கு சாதித்துள்ளேன். இனியும் சாதிப்பேன். உங்களால் முடிந்ததை சாதித்துக்கொள்ளுங்கள். ஒரு மாணவரிடம் எதுசரி,எதுதவறு என்று கேட்கும் நிலையில் நான் இல்லை. எல்லாம் தெரிந்தது போல் காட்டிக்கொள்ளாமல் ஏதாவது உருப்படியாகச் செய்யப்பாருங்கள். நன்றி.               
 Professor.Vimalan.  

Wednesday 26 November 2014

சங்கத்தமிழில் வானசாத்திரமா ? சோதிடசாத்திரமா ? 25-11-2014 # astrology # astronomy

அன்புடையீர் வணக்கம். மீண்டும் எனது blogspot ல் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்திய வானசாத்திரம் / சோதிடசாத்திரம் வரலாறு பற்றி ஒரு சிறிய விளக்கத்தினை இங்கு உங்கள் முன் வைக்கிறேன். இந்திய வானசாத்திரம் / சோதிடசாத்திரம் முழுவதும் வடமொழியான ஸமஸ்கிருதமாகும். மற்ற இந்திய மொழிகளில் எந்த அளவிற்கு தொடர்புள்ளது என்று அறியமுடியவில்லை. # TAMIL ஆனால் ஒருசில தமிழர்கள் சங்கத்தமிழ் காலங்களில் வானசாத்திரம் இருந்ததாகக் கருதுகிறார்கள். அவ்வாறு ஏதும் இல்லை என்பதற்கு ஆதாரமாக இங்கு ஸமஸ்கிருதத்தில் உள்ள வானசாத்திர அறிஞர்களின் பெயர்கள், அவர்கள் எழுதி தற்பொழுது உள்ள நூல்களின் விபரங்களும் கொடுக்கப்படுகின்றன. அதேபொல் சங்கத்தமிழில் முழுமைபெற்ற வானசாத்திர நூல்கள் எழுதவில்லை என்பதற்கு விளக்கமும் அளிக்கப்படுகிறது.
சமஸ்கிருத வானசாத்திர அறிஞர்களும். நூல்களும்.
1.ஆர்யபட்டா   -கி.பி.476 ஆம் ஆண்டில் வாழ்ந்துள்ளார். இவர் ஆர்யபட்டீயம் என்ற வானசாத்திர நூலை  கி.பி.499 ல்எழுதியுள்ளார்.
2. லல்லா : கி.பி.498 ல் பிறந்துள்ளார். ஸிஸ்யாதி விருத்திதம் என்ற வானசாத்திர நூலும், பதிகணிதம் என்ற கணித நூலையும் எழுதியுள்ளார். ஸிஸ்யாதி விருத்திதம் நூலில் இரண்டு பிரிவுகள் உள்ளன.அவை 1.கணிதத்யாயம்.2. கோளத்யாயம்.ஆகும். இவர் முகூர்த்தம்,பிரஸ்னம்,போன்ற சோதிட நூல்களையும் இயற்றியுள்ளார்.
3.வராகமிகிரர் ;இவர் இறந்த ஆண்டு கி.பி.587 என்று குறிப்பிடுகின்றனர். பஞ்சசித்தாந்திகா என்ற வானசாத்திர நூலை இயற்றியுள்ளார். பிருகத்சாதகம். பிருகத்சம்கிதா, யோகயாத்ரா, லகுசாதகம், விவாகபடலம், பிரஸ்ன மகோதாதி, பிரஸ்னசந்திரிகா, தைவக்ஞவல்லபம், ஆகிய சோதிட நூல்களையும் எழுதியுள்ளார்.
4.பாஸ்கரா-1. ஆர்யபட்டீயம் நூலை விளக்கியுள்ளார். கி.பி.600ல் பிறந்ததாகக் கருதப்படுகிறது. மகாபாஸ்கரியம்,லகுபாஸ்கரியம் என்ற கிரக கணித வானசாத்திர நூல்களை எழுதியுள்ளார். இவர் நூலை அனேக வானசாத்திர அறிஞர்கள்மேற்கோள்காட்டியுள்ளனர்.(சங்கரநாராயண,உதயதிவாகர, சூர்யதேவா.மகிபட்டா,பரமேஸ்வரா, நீலகண்டர்)
5.பிரம்ம குப்தா- கி.பி.600ல் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றனர். இவர் பிரம்ம ஸ்புடசித்தாந்தம், கண்டகாத்யாக என்ற இரண்டு வானசாத்திர நூல்களை எழுதியுள்ளார். ஒன்றை கி.பி.630லும்,மற்றொன்றை கி.பி.665லும் எழுதியுள்ளார்.
6.சங்கர நாராயண- கி.பி.869ல் கேரளாவில் வாழ்ந்துள்ளார். லகுபாஸ்கரியம் வானசாத்திர நூலிற்கு விளக்கம் எழுதியுள்ளார். கேரளாவில் கொல்லத்தில் பிறந்த இவர் மகோதயபுரம் தலைநகர், குலசேகரத்தில் அரசர் ரவிவர்மாவின் வானசாத்திரம்,சோதிடவியல் ஆலோசகராக இருந்துள்ளார். கோளரங்கத்தை ஏற்படுத்தியும் உள்ளார்.
7.வதேஸ்வரா- கி.பி.880ல் பிறந்துள்ளார். கி.பி.904ல் வதேஸ்வர சித்தாந்தம் என்ற வானசாத்திர நூலை எழுதியுள்ளார். சூர்யசித்தாந்தம் (ஸிஸ்யாதி விருத்திதம்) பிரம்மஸ்புடசித்தாந்தம், கண்டகாத்யாயம், நூல்களை ஆராய்ந்து கருத்துக்களை தனது நூலில் பதிந்துள்ளார்.
8.மஞ்ஜாலா- லகுமானஸம் என்ற நூலை எழுதியுள்ளார். அந்நூலில் மத்யமதிகாரம், ஸ்பஸ்டமதிகாரம், தித்யாதிகாரம், திரிபிரஸ்னதிகாரம். கிரகயுத்த அதிகாரம்,கிரகணதிகாரம், சிரிங்கோண்ணதிகாரம், என்று பிரித்து எழுதியுள்ளார்.
9.பிர்துதகஸ்வாமி- கி.பி.1040ல் வாழ்ந்துள்ளார். பிரம்மகுப்தாவின் பிரம்ம ஸ்புட சித்தாந்தத்திற்கு வியாக்யானம் எழுதியுள்ளார். அதில் கோலாத்யாயத்திற்கும்,கண்டகாத்யாயத்திற்கும் சேர்த்து 5300பாடல்களை எழுதியுள்ளார்.
10. ஆர்யபட்டா-2 :கி.பி 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்துள்ளார். ஆர்ய சித்தாந்தம் என்ற வானசாத்திர நூலை எழுதியுள்ளார். இதில் கோள்களின் நகர்தல், அல்ஜிப்ரா,கணிதங்கள் உள்ளன.
11. ஸிரிபதி- கி.பி.999ல் பிறந்துள்ளார். தீக்கோடிகரணம் என்ற நூலில் கிரகணகணிதங்களை விளக்கியுள்ளார். இவர் சோதிடநூல்களையும், வானசாத்திர நூல்களையும் எழுதியுள்ளார். அவை ஜாதகபத்ததி, சோதிச ரத்னமாலா, தைவக்ஞவல்லபம்,சித்தாந்தசேகரம், துருவமானசகரணம், கணிததிலகம்,பீஜகணிதம்,ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
12.போஜராஜன் –கி.பி.1000-1060,இவர் எட்டு சோதிடநூல்களை எழுதியுள்ளார். அவை வித்வஜ்னவல்லபம், இராஜமார்த்தாண்டம்,பிருகத்ராஜமார்த்தாண்டம், வியவகார சமுச்யம்,பீமபராக்ரமம்,புஜபலநிபந்தம், பூபாலசமுச்யம், அதித்ய பிரதாப சித்தாந்தம் ஆகும்.
13. தஸ பலா-அரசர்- கி.பி.1058ல் ராஜமிகாண்ககர்ணம் என்ற நூலை எழுதியுள்ளார். பல நூற்களின் கருத்துக்களை மறுத்து மேசசங்ராந்தி,திதிசுத்தி, போன்றவற்றை விளக்கியுள்ளார்.
14. பிரம்மதேவா- கி.பி.1092ல் கரணபிரகாச என்ற நூலை எழுதியுள்ளார். இந்நூல் பஞ்சாங்கத்தை தயாரிப்பதற்கான கணிதங்களுடையதாகும். ஆர்ய பட்டீயத்தை தழுவி எழுதியதாகும்.
15, சதானந்தா- கி.பி.1099ல் பாஸ்வதி என்ற வானசாத்திர நூலை எழுதியுள்ளார் இந்நூல் அனைத்து வானசாத்திர மாணவர்களுக்கும் பயன் படக்கூடியதாக உள்ளது.இந்நூல் எட்டு பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. துருவதிகாரம், கிரகதுருவதிகாரம்,பஞ்சாங்கஸ்புடதிகாரம்.திதி பிரஸ்ன அதிகாரம், சந்திர கிரகணதிகாரம்,சூர்யகிரகணதிகாரம், பரிலக்னதிகாரம். என்பதாகும்.
16.பாஸ்கரா-2 ;கி.பி.1114-1206 –புகழ்பெற்ற சித்தாந்த சிரோன்மணி என்ற வான சாத்திர நூலை எழுதியுள்ளார். மேலும் லீலாவதி, பீஜகணிதம், கரணகுதூகலம் வஸிஸ்டதுல்யம், சர்வதோபத்ரயந்திரம், ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.
17.ஸிரிதரா- கி.பி 1227ல் லகுகேசரசித்தி என்ற கோள்களின் நிலைகளைக் கூறும் நூலை எழுதியுள்ளார்.
18. பரமேஸ்வரா- கி.பி.1353ல் கேரளாவில் வாழ்ந்துள்ளார். இவர்,திருக்கணிதம், கோளதீபிகா, வாக்யகரணம்,கிரகணமந்தனம், கிரகணநியாயதீபிகா, கிரகணாஸ்டகம், அதேபோல்,ஆசார்யசங்கிரக,ஜாதபத்ததி போன்ற சோதிட நூல்களையும் எழுதியுள்ளார்.
20. தாமோதரன் –கி.பி.1417ல் கரணங்களைக் குறிக்கும் வானசாத்திர நூலான பாததுல்யத்தை எழுதியுள்ளார்.
21. கங்காதர- கி.பி.1434ல் சந்திரமானபீதனா என்ற 200 பாடல்கள் கொண்ட வானசாத்திர நூலை எழுதியுள்ளார்.
22. நீலகண்ட சோமயாஜி- கி.பி. 1443ல்கேரளாவில் பிறந்துள்ளார். கோளசரம், சித்தாந்த தர்பனா, தந்ரசங்கிரகா, கிரகணநிர்ணயா, சந்த்ரசாயகணிதம், ஆர்யபட்டீய பாஸ்யம், சுந்தர்ராஜ பிரஸ்னோத்ரம்,(வரருசியின் வாக்ய பஞ்சாங்க கணிதத்திற்குவிளக்கம்)ஆகிய வானசாத்திர நூல்களை எழுதியுள்ளார்.
23. கேசவ தைவக்ஞர்- கி.பி.1496ல் கிரக கௌதுகம் என்ற நூலை எழுதியுள்ளார். திதிசித்தி, வர்ஸகிரகசித்தி, ஜாதகபத்ததி. தாஜகபத்ததி,முகூர்த்த தத்துவம், கணிததீபிகா, சித்தாதவாஸச பாடகம், காயஸ்ததி,தர்மபத்ததி,குண்டஸ்டகபடலம்.போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.
24. சித்ரபானு- கி.பி.1475-1550ல் வாழ்ந்துள்ளார். தனது 55 ஆவது வயதில் கரணாமிர்தம் என்ற நூலை எழுதியுள்ளார். இது பரமேஸ்வரரின் திருக்கணித முரை பஞ்சாங்கத்திற்குரிய நூலாகும். 4 அத்தியாத்தில் 134 பாடல்கள் கொண்டதாகும்.
25. மகரந்தம்- வாரணாசியில் வாழ்ந்துள்ளார். கி.பி.1478ல் மகரந்தசாரணி என்ற  வானசாத்திர நூலை எழுதியுள்ளார்.
26. கணேச தைவக்ஞர்- கி.பி.1490ல் பிறந்துள்ளார். இவருடைய கிரகலாகவ நூல் 1520 லெழுதப்பட்டதாகும். சித்தாந்தசிரோன்மணிதீகா,தர்ஜனியந்திரம் மற்ற வானசாத்திரநூல்களாகும்.
27. சூர்யதாஸ- கி.பி.1505ல் சித்தாந்தசுந்தரம், பீஜகணிதம், லீலாவதிதீகா, ஆகிய வானசாத்திர நூல்களை எழுதியுள்ளார்.  
மேலே கூறியவர்களைப்போல், விஸ்வநாதா,ஆனந்ததைவக்ஞர்-2,ரங்கனாதர், கிருஸ்ணதைவக்ஞர்( மாமன்னர் ஜஹாங்கீர் அரண்மனைச் வானசாத்திரி, சோதிடரும் ஆவார்,கி.பி-1605-1627 வரை),கோவிந்தர்,நரசிம்மர் முனீச்வரா, கமலாகரா,மணிரமா பொன்ற பல வானசாத்திர அறிஞர்கள் வாழ்ந்துள்ளனர். இவர்கள் எழுதிய வானசாத்திர நூல்கள், சோதிடசாத்திர நூல்களனைத்தும் இப்பொழுதும்கிடைக்கின்றன.இவைஸமஸ்கிருதகல்லூரிகள்,பல்கலைக்கழகங்கள்.ஆராய்ச்சி அமைப்புகளில் காணலாம்.ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களும் உள்ளன. சென்னை அடையாறு அன்னிபெசண்ட் தியாசபிகல் நூலகத்திலும் காணலாம்.
நான் வடமொழி வானசாத்திர நூல்கள் மற்றும் சோதிடசாத்திர அறிஞர்களை கி.பி 500லிருந்து. கி.பி.1600 வரைக்கும் பட்டியல் போட்டு விளக்கியுள்ளேன். இன்னமும் விளக்கலாம்.
இதே போல் சங்கத் தமிழர்களின் வானசாத்திர நூல்களையும், சோதிடசாத்திர நூல்களையும் பட்டியல் போட முடியாது. ஒரு நூல் கூடகிடையாது என்பது தான் உண்மையாகும்.
சங்ககால தமிழ் வானசாத்திர நூல்கள் இன்றுவரைக் கண்டுபிடிக்கப் படவில்லை.சோதிட நூலும் இல்லை.
ஒருசில தமிழறிஞர்கள இலக்கியத்தில் சோதிடம்,காலக்கணிதம் என்றெல்லாம் நூல்கள் எழுதியுள்ளனர். அவற்றில் சங்ககாலப்பாடல்களில் நட்சத்திரம், திதி, நேரக்கணிதம்,முகூர்த்தநேரம் போன்ற சாதாரண செய்திகளைத்தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவற்றைக் கொண்டு பஞ்சாங்கம் கணிப்பதற்காண எந்த ஒரு கணிதமும் கிடையாது. சாதகக் கட்டமும் போடமுடியாது.தமிழுக்கு முழுமைபெற்ற வானசாத்திரத்தைக் கணிக்கும் நூல் ஒன்று கூட காணக்கிடைக்க வில்லை என்பது வருத்தமான செய்தியாகவுள்ளது. வானசாத்திரமே இல்லாத பொழுது அதை அடிப்படையாகக் கொண்டு கணிக்கும் சோதிட சாத்திரநூல் எவ்வாறு உருவாகியிருக்கமுடியும். எனவே சங்ககாலதமிழ் முழுமை பெற்ற வானசாத்திர நூல்கள் எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது. ( இன்னும் சொல்லப்போனால். நம்மவர் தமிழாண்டு என்று கூறுகின்றனரே அவை தமிழல்ல. பிரபவ,விபவ,சுக்கில,பிரமோதூத, போன்ற அறுபது ஆண்டுப் பெயர்களும் ஸமஸ்கிருத ஆண்டுப்பெயர்களாகும். தமிழில் ஒரு ஆண்டுப்பெயர்கூட கிடையாது.) ஆனால் தமிழ் மொழியில் உள்ள திருக்குறள் போல் உலகப்பொதுமறை எந்த மொழியிலும் கிடையாது.
மிக்க நன்றி.நன்றி.நன்றி.                     பேராசிரியர். விமலன். 
                                                            25-11-2014





  

Saturday 1 November 2014

புனித இந்து சமய வேதங்களில் உள்ள சோதிடம். 01-11-2014

பெருமைமிகு போடினாயக்கனூர் சோதிடப் பெரியோர் திரு.பாஸ்கரன் அவர்களுக்கு வணக்கம். உங்களின் வினாவிற்கான பதில் பலரும் அறிய வேண்டிய ஒன்றாகும். அதன் பொருட்டு இங்கு விளக்கப்படுகிறது. ஏனெனில் முதுநிலை பாடத்திட்டதில் சிறிது அறிந்து இருப்பீர்கள்.






நாள்,அர்த்தமாஸம்,மாஸம், ருது, வர்ஸம்.இவற்றின் பகுப்பை பற்றியும், சூர்ய,சந்திரரின் நிலையால் நிகழும் அமாவாஸ்யை,பூர்ணிமை இவற்றைபற்றியும்,அப்போது நிகழும் கிரகணங்களைப்பற்றியும், நட்சத்திரங்களைப்பற்றியும் கூறும் நூல் சோதிஸம் ஆகும். இவையெல்லாம் யசூர் வேதம் முதலிய வேதங்களிலே கூறப்பட்டன. ஆனால் தற்பொழுது அவற்றைப்பற்றி விரிவாகக் கூறும்  நூல்கள் பிற்காலத்தனவே ஆகும் என்று குறிபிட்டுள்ளார்
வடமொழிப்பேராசிரியரின் கூற்றிலேயே நமக்கு தெளிவாக விளங்குகிறது வேதங்களில் கூறப்பட்டது வானசாத்திரம் என்று. வேதத்தில் உள்ள சோதிஸம் வானசாத்திரமாகும். எதிர்காலப்பலன்கள் கூறும் நம்முடைய சோதிடக்கருத்துக்கள் ஒன்றுமில்லை. சரிதான் சோதிடக்கருத்துக்கள் தான் இல்லை, வானசாத்திரம் இருக்கிறதே அவை பயன்படும் அல்லவா என்றால் அதுவும் இல்லை. அங்குள்ள வான சாத்திரம் நமது சாதகம் கணிப்பதற்கு பயன்படாது.கோள்கள் நிலை,பாவகநிலை போன்றதைக் கணிக்கும் எவ்வித கணிதங்களும் இல்லை.  நாம்தான் வானசாத்திரத்தை குறிக்கும் சோதிஸத்தை , நமது எதிர்காலப்பலன்கள் கூறும் சாத்திரத்திற்கும் வைத்துக்கொண்டோம். எனவே வேதங்களில் எதிர்காலப் பலனகளைக்கூறும் சோதிடசாத்திரம் இல்லை. 
பலன்களை ஆய்வு செய்து புதியவிதிகளை ஏற்படுத்துங்கள். அதுவே எதிர்கால சோதிடத்துறைக்கு ஏற்றதாகும். உங்களது பெயர்களும் நிலைத்து நிற்கும். எந்தமுறை சரியானது,எந்தமுறை தவறானது என்று வாதம் தேவையில்லை. இந்த பிரச்சனையே ஆய்வினால் ஏற்படுவதாகும்.
அனைத்து நிலைகளிலும் ஆய்வுகளைச் செய்து முன்னேற்றமடையுங்கள்.
எனது கருத்து சரியானது என்று வாதிடாதீர்கள். உங்களது கருத்து மறுக்கப்பட்டாலே சோதிடத்துறை வளர்ச்சியுறும். கே.எஸ்.கே.அவர்கள் ஒரு போதும் எனது கருத்து முழுவதும் சரியானது என்றுகூறவில்லை. அனைவரும் ஆய்வு செய்யுங்கள் என்று கூறிச்சென்றுள்ளார். எங்களது முறையே சரியானது என்று கூறுவது அவரவர்களின் கருத்துக்களாகும்.  இதைப்பற்றிகவலை கொள்ளத்தேவையில்லை.
 முற்றுப்பெற்ற முடிவுகளை கே.எஸ்.கே.அவர்கள் கூறியிருந்தால் நாம் அனைவருமே அதை தொடர்ந்திருப்போம்.அப்படி இல்லை. 
அதனால் உங்களது அனுபவத்தை பொது சபையில் கூறுங்கள் .அப்பொழுது தான் எங்கேயெல்லாம் உங்களது கருத்து மாறுபடுகிறது என்று அறிந்து புதிய விதிகளை ஏற்படுத்தும் அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். மறுத்துக் கருத்துக் கூறுபவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் அவர்கள் உங்களது ஆய்வு அறிவைத்தூண்டுகிறார்கள்.  மட்டம் தட்டுபவர்களை புறந்தள்ளுங்கள்.பதில் கூறி அவர்களை அசிங்கப்படுத்தாதீர்கள். கே.எஸ்.கே அவர்கள் ஆன்மீகத்தை ஆய்வு செய்யவில்லை. பலன் கூறும் சோதிட அறிவியலை ஆய்வு செய்தார். சில விதிகளைக் கொடுத்துள்ளார்.அதனால் இன்று நம்மிடம் பேசப்படுகிறார். 

நான் கூறியகருத்துக்களை,மறுத்துக்கூறியதைஏற்றுக்கொண்டதாலேயே இவ்வளவு செய்திகள் பொது மக்களுக்கு கிடைத்துள்ளன. (எந்த ஒரு சிரமமும் இல்லாமல்) நமது செயல்கள் அனைத்துமே மற்றவர்களுக்காகவே.  அனைத்தும் மாற்றம் என்ற விதியில் மாறுதலுக்குள்ளாகும். இதை உணர்ந்து செயல் படுவோம்.

உங்களாலும் முடியும். இந்த உலகில் உங்கள் பெயரை பதிவு செய்ய. 
அன்புடன் பேராசிரியர்.விமலன்.  01-11-2014.

கீழே உள்ள பைலை கிளிக் செய்து வேதாங்கசோதிடத்தில் உள்ள குறிப்புக்களைக் காண்க.

https://drive.google.com/file/d/0B0pMQYkVx5DNSzVWSW9pMm03TWs/view?usp=sharing