VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

Friday 31 October 2014

ஆன்மீகத்தை ஆய்விற்கு உட்படுத்தமுடியாது. ஆனால் சோதிடத்தை ஆய்விற்கு உட்படுத்தமுடியும்.


மதிப்பிற்குரிய சோதிடப் பெரியோர் போடிநாயக்கனூர் திரு.பாஸ்கரன் அவர்களுக்குவணக்கம்.சோதிடவிதிகளைக்கொண்டுஆன்மீகப்பரிகாரங்களை ஆய்வு செய்யமுடியுமா?
ஆய்வுகளின் அடிப்படை விதி ஏன்,எதற்கு,எப்படி? என்ற வினாக்களாகும். இவற்றில் எந்த ஒரு வினாவிற்கும் ஆன்மீகத்தினால் பதில் கொடுக்க முடியாது.
புனிதமானஆன்மீகச்சமயங்கள்மூலநூல்களினால்கட்டப்பட்டதாகும்.யூதர்களின்-பழையஏற்பாடு / இந்துக்களின் –நான்குவேதங்கள் /சமணர்களின் – கல்பசூத்ரா,/ பெளத்தர்களின் –தீப்திகா,வைரசூத்திரம்/ பார்சிகளின் –அவெஸ்தா /கிறித்துவர்களின்-திருவிவிலியம்,/இசுலாத்தியர்களின் –அல்குரான்,அல்ஹதீஸ்,சைவர்களின்பன்னிருதிருமுறைகள்,சிவஞானபோதம்/வைணவர்களின் –நாலாயிரதிவ்யபிரபந்தம்.திருப்பாவை,/சீக்கியர்களின் ஆதிகிரந்தசாகிப். போன்றவையாகும். இவற்றில் எவ்விதமாற்றங்களும் செய்யப்படவில்லை.
இந்நூல்களில் உள்ளகருத்துக்கள் அனைத்தும் எம்பெருமான் இறைவனால் மக்களுக்கு அளிக்கப்பட்டவையாகும்.அனைத்தும் புனித நூல்களாகும்.அவற்றில் உள்ளகருத்துக்களின்படி வாழவேண்டும். மாறிசெயல்பட்டால் இறைவனின் தண்டனைக்கு ஆளாகவேண்டும்.எனவே நூலின் கருத்துக்களை மாற்றமுடியாது. இங்கு ஏன்,எதற்கு,எப்படி என்ற வினாவிற்கு வழியில்லை. எனவே மாற்றதிற்கு வழிவகுக்கும் அறிவியல் ஆய்விற்கு ஆன்மீகத்தில் இடமில்லை. ஆன்மீகப்பரிகாரத்திலும் இடமில்லை.
சோதிட ஆய்வு ; சோதிடத்தை ஆய்வு செய்யமுடியும். ஏனெனில் இங்கு ஆன்மீகம் என்ற அடிப்படை இல்லை. ஆதலால் சோதிடநூல்களில் கூறியுள்ள எந்த ஒருகருத்தையும் ஆய்விற்கு உட்படுத்தலாம்.எந்த ஒரு இறைவனும் நமக்கு தண்டனை அளிக்கமாட்டார்.எனவே சோதிடம் ஆய்விற்குட்பட்டதாகும்.இக்கலை,பகுதியானஅறிவியலா,அல்லதுமுழுமையான அறிவியாலா என்று நாம் அனைவரும் ஆய்வு செய்து உலகினர்க்கு தெரிவிக்கும் கட்டாயத்தில் உள்ளோம். கே.எஸ்.கே அவர்கள் சோதிடத்தை ஆய்வு செய்து சில முடிவுகளை கொடுத்துள்ளார். அந்த முறையில் பலன் கூறும் பொழுது ஏற்படும் சிக்கல்களை, அம்முறையை பயன்படுத்துபவர்கள் ஆய்வு செய்யவேண்டும். அதேபோல் பாரம்பரிய சோதிடப்பலன்கள் கூறும் நூல்களில் உள்ள கருத்துக்களை பல்வேறு விதிகளை ஏற்படுத்தி சாதகங்களில் எவ்வாறு செயல்படுகிறதுஎன்று ஆய்வு செய்யவேண்டும்.
சோதிடம் இல்லாமல் ஆன்மீகம் வளரமுடியும்.
அதேபோல் ஆன்மீகம் இல்லாமல் சோதிடமும் வளர முடியும். நன்றி.

Professor.Dr.Vimalan.

Tuesday 28 October 2014

தனித்தன்மையான ஆலயப்பரிகாரங்கள் சோதிடவியலில் இல்லை.

மதிபிற்குரிய போடிநாயக்கனூர் சோதிடப்பெரியோர் திரு.பாஸ்கரன் அவர்களுக்கு வணக்கங்கள். ஆலயப் பரிகாரத்திற்கான சுருக்கமான பதில்.
ஆலயப் பரிகாரம்: தமிழகத்தில் உள்ள ஆலயங்கள் மூன்று பிரிவுகளில் காணப்படுகின்றன. அவை இனக்குழு வழிபாட்டுச் சமயத்தைக்குறிக்கும் குலதெய்வஆலயங்கள்.2.சைவத்திருத்தலஆலயங்கள்.3.வைணவத்திருத்தல ஆலயங்கள் என்றுள்ளன. இவை மூன்றிற்கும் பொதுவாக வேள்வி வழிபாடு செய்யும் இந்து சமய அமைப்பும் உள்ளன. எனவே தமிழகத்தில் நான்கு பிரிவுகளிலும் வழிபாடு செய்யும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.( பிற மதத்தினர் இங்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.)
ஆலயத்தின் அடிப்படைக்கோட்பாடு புனிதம்—தீட்டு என்பதாகும். இந்த விதி அனைத்து சமயத்தினருக்கும் பொதுவானதாகும்.இவ்வாறு பிரிக்கப்பட்டதில் ஆலயம், ஆலயத்திற்கு இனணயான பகுதிகள்,பஞ்சபூதங்கள்,மானுடத்தின் நற்செயல்கள் போன்றவை புனிதமானதாகவும். ஆலயத்திற்கு இணையில்லாத பகுதிகள், மானுடத்தின் தீய செயல்கள்,போன்றவை தீட்டானதாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஆலயங்களின் (சமயங்களின்) வேலை என்பது தீட்டை, புனிதமாக்குவதாகும். மானுடத்தின் தீயசெயல்களினால் அவர்களுக்கு தீட்டு ஏற்படுகிறது. தீட்டினால் மானுடம் பாவமடைகிறது. அவ்வாறு பாவமடைந்த மானுடத்தை பாவத்திலிருந்து விடுபடும் (பாவமன்னிப்பு) வழியாக ஆலயவழிபாட்டிற்கு உட்படுத்தி புனித நீர்களை தெளித்து, பாவமற்ற புனிதராக்குவதே ஆலயவழிபாடாகும். புனித நீர் தவிர்த்து, ஆலயத்தில் இறைவனுக்குப் படைக்கப்படும் பலி பொருட்களும் புனிதப்பொருட்களாகும். இவற்றை மானுடம் ஏற்றுக்கொண்டால் அவர்புனிதர் ஆவார்.
1.குலதெய்வ வழிபாட்டில் ஆடு,கோழி போன்றவை பலியிடப்பட்டு அவற்றை இறைவனுக்குப் படைக்கின்றனர். பின்னர் படைக்கப்பட்ட பொருளை இறைவன் ஏற்றுக்கொண்டார் என்ற நம்பிக்கையில்,மக்கள் அனைவரும் அப்பலி பொருளை உண்டு மகிழ்ந்து பாவத்தை நீக்கிக்கொள்வர். ஒருசில குலதெய்வ ஆலயங்களில் சைவப்பொருள்களையும் படைத்து வழிபடுகின்றனர்.
2.புனித இந்து சமய வேதங்களான இருக்கு,யசூர்,சாம,அதர்வங்களில் கூறியுள்ளபடிவேள்விஇயற்றும்மந்திரங்களும்,இறைவணக்கங்களும்,பலியிடுதலும் போன்ற சடங்குகள் நிகழ்த்தப்பட்டு பலிபொருளை இறைவன் ஏற்றுக்கொண்டார் என்ற அடிப்படையில் தாங்களும் உண்டு மகிழ்ந்து பாவத்தை நீக்கி புனிதராவர்.
3.புனித சைவத்திருத்தல ஆலயங்களில் பன்னிருதிருமுறைகள்,சைவ சாத்திரம்,ஆகமம், வழிபாட்டு நூல்களில் கூறியுள்ளபடி இறைவழிபாடுகள் செய்யப்பட்டு புனிதமான பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றை மானுடம் ஏற்றுக்கொண்டால் பாவங்கள் நீங்கி புனிதராவர்.
4.வைணவத்திருத்தல ஆலயங்களில்,இச்சமயத்திற்குரிய ஆகமம்,வழிபாடு, சாத்திரம்,தத்துவங்களின்படி இறைவழிபாடுகள் நிகழ்த்தப்படுகின்றன. இந்த ஆலயங்களிலும் அனைத்து பாவமுள்ள மானுடத்திற்கும் புனிதப்பொருள்களைக் கொடுத்து அவர்களை புனிதராக்குகின்றனர்.
இந்த ஆலயங்கள் அனைத்தும் தமது பிரிவிற்கு தகுந்தாற்போல் இறை பிரசாதப்பொருள்களை மானுடத்திற்கு வழங்குகின்றன. இவற்றிற்கு விலையேதும்இல்லை.(தீர்த்தம்,திருநீறு,குங்குமம்,சந்தணம்,பிரசாதங்கள்,படையல் பொருட்கள்) இவற்றை ஏற்றுக்கொண்டாலே செய்த பாவமெல்லாம் போய்விடும் எனும்பொழுது எதற்காக பணத்தை செலவழித்து சாந்தி பரிகாரச்சடங்குகளை நடத்தவேண்டும்.
ஆலய வழிபாடுஎன்பது பொதுவாக இருக்கும் பொழுது, சிறப்பு தெய்வவழிபாடு என்பது எதற்கு? அனைத்து ஆலயங்களிலும் எம்பெருமான் குடிகொண்டிருப்பார்தானே! சோதிடத்தில் ஒவ்வொரு தோசமாகச்சொல்லி அந்தகோயிலுக்குசென்றால் பரிகாரம் ஆகிவிடும் என்று எப்படிச்சொல்லமுடியும்.உண்மையில் உங்கள் ஊரில் உள்ள இறைவனை நம்பாமல் வேறு ஒரு ஊருக்கு அனுப்புவது எப்படிச்சரியாகும். (நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் எந்த ஊருக்கும் செல்வதற்கு வாய்ப்பு இல்லை.  அவரவர் ஊர்க்கோயிலில் தான் வழிபட்டு இருப்பர்.)
பாவமன்னிப்பு,பரிகாரம் என்பதெல்லாம் இறை நம்பிக்கையில் செய்யப்படும் செயலாகும்.நடந்தாலும்,நடக்காவிட்டாலும் மக்கள் கவலைப்படாமல் திரும்பவும் ஆலயங்களுக்கு போய்கொண்டுதான் இருப்பர். எனவே சாதாரண வழிபாட்டிலேயே பாவபரிகாரம் அடையும் மானுடத்தை, சோதிடவியல் தோசங்களை பெரிதாகக்கூறி மக்களிடம் ஏன் பணத்தைப் பிடுங்கவேண்டும். எனவேசோதிடத்தின் கோள்களின் அடிப்படையில் ஆலயவழிபாடு செய்விப்பதெல்லாம் மக்களை திசை திருப்பும் வேலையே. ஆலயவழிபாடு என்பது மானுடத்தின் பொதுக்கடமையாகும். குறிப்பிட்ட தோசபரிகாரம் என்பதெல்லாம் கோயில்களில் கிடையாது. அனைத்தும் இந்து,சைவம்.வைணவம்.குலதெய்வக் கடவுள்களாகும். இவற்றில் முதன்மைக்கடவுளாக அச்சமயத்தின் முதற்கடவுளே இருப்பர். ஆதலால் எந்த ஆலயத்திற்கு சென்றாலும் அவரவர் விதிப்படியே நடைபெறும்.விதியை வாசிப்பதே சோதிடக்கலையாகும்.மாற்றுவது அல்ல. மற்றவை நூலில்.


Monday 27 October 2014

சோதிடம் ஆன்மீகம் சார்ந்தது அல்ல. அறிவியல் சார்ந்ததாகும்.

பேரன்புடைய சோதிடப்பெரியோர் திரு.பாஸ்கரன் அவர்களுக்கு ,உங்கள் பேராசிரியர் விமலன் அளிக்கும் சுருக்கமான பதில்கள்.
வினா எண்கள்: 3,4-ஆலயப் பரிகாரங்கள் செய்வதால் தனிநபர் சோதிடப்பலன்கள் மாற்றம் ஏற்படுமா ? ஆலயப்பரிகாரம் என்பது என்ன அவற்றை எவ்வாறு கண்டு கொள்வது?
      இந்த இரண்டு வினாக்களும் ஒரே செய்தியை விழிப்பதால் அதற்குரிய பதில்கள் இணைத்தே கொடுக்கப்படுகின்றன. முதலில் சோதிடம் ஆன்மீகமா ? அல்லது அறிவியலா? என்பதில் விளக்கம் பெற்று பின்னர் பதிலுக்கு வருவோம்.
ஆன்மீகம் : மெய்பொருளைத்தேடும் அமைப்பாகும். இதற்கு காட்சி பொருள் என்று ஒன்று தேவையில்லை. நாமாக பல்வேறு உருவக அமைப்பைக் கொண்டு வழிபட்டாலும் முடிவில் பிரபஞ்சம் ஈஸ்வர சொருபம் என்று முடித்து விடுவோம். இருட்டான அறைக்குள் இல்லாத கருப்புப் பூனையைத் தேடுவது போல் உள்ளது மெய்ப்பொருள் என்று கூறுவதும் உண்டு. அதன்படி சிலர் மெய்ப்பொருளை அறிந்தேன் என்பார்கள், சிலர் அறிய முயல்கிறேன் என்பார்கள். இவை அனைத்தும் அவரவர் அனுபவத்தை ஒத்ததாகும். தான் கண்ட காட்சியையோ,அனுபவத்தையோ அடுத்தவருக்கு காட்டமுடியாது. ஒன்றைகண்கொண்டுபார்க்காமலேஅனுமானித்துசெயல்படுவது
(வழிபடுவது) ஆன்மீகமாகும்.
சோதிடவியல் : வான சாத்திரம் பிரபஞ்ச ஆய்வுகள் செய்து பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி மானுட வாழ்விற்கு மையமாகத் திகழ்கிறது.  அதைப்போலவே அறிவியலின் முன்னோடியான வானச் சாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு மானுடவியலிற்கு எதிர்காலப்பலகளைக் கூறுவது சோதிடவியலாகும்.  வானத்தில் உள்ள நட்சத்திரங்களையும் ,கோள்களையும், இராசி மண்டலங்களையும் நாம் காட்டமுடியும்.அதன் நகர்ச்சிகளுக்குத்தகுந்தவாறு பலன்களை எடுத்துக்கூற முடியும். நமது சோதிடத்தில் பல்வேறு கணித அமைப்புகள் உண்டு. அதைக்கொண்டு கணித்து எதிர்காலப்பலன்களக்கூறும் அமைப்பாக சோதிடக்கலை உள்ளது. வானசாத்திரமும், கணிதமும் அறிவியல் சார்ந்ததாகும்.  ஒன்றைப்பார்த்து அனுமானித்து செயல்படுவது அறிவியலாகும். ஒன்றை பார்க்காமல் அனுமானித்து செயல்படுவது ஆன்மீகமாகும். எனவே  வானத்தில் உள்ள நட்சத்திரங்களையும்,கோள்களையும் பார்த்து அனுமானித்து சரியான எதிர்காலப்பலன்களைக் கூறுவதால் நமது சோதிடவியல் அறிவியல் சார்ந்த கலையாகும். சோதிடப்பலன்கள் கூறுவதற்கு ஆன்மீகத்தின் பங்கு ஒன்றும் இல்லை. (பரிகாரச் செயல்கள் வரும் பொழுதே ஆன்மிகம் உள்ளே வருகிறது.) மற்றபடி ஆன்மீகத்திற்கும் சோதிடத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையே. 

சோதிடப்பரிகாரத்தினால் கர்மவினைப்பலன்களை மாற்ற முடியாது.

அன்புடன் எனது நண்பரும்,மாணவரும், போடிநாயக்கனூரின் சோதிடப் பெரியோருமாகிய திரு.பாஸ்கரன் அவர்களுக்கு, பேராசிரியர் .விமலனின் வணக்கங்கள் பல. தாங்கள் அனுப்புகின்ற வினாக்களுக்கு நன்றிகள். தங்களின் ஆர்வம் காரணமாக சுருக்கமான பதில்கள் இங்கு கொடுக்கப்படுகின்றது. 

வினா எண் 2. பரிகாரத்தினால் கர்மவினைப் பலன்களை மாற்றியமைக்க முடியுமா ?   இவ்வினாவிற்கு விடையளிப்பதற்கு முன்னர் ஒருமுடிவிற்கு வரலாம்.    வானசாத்திர சோதிடம் என்பது நட்சத்திரங்கள்,இராசிகள்,    கோள்கள், பாவகங்கள், ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறுகணிதப் பிரிவுகளை கணித்து எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய செயல்களை முன்னரே தெரிவிக்கும் அறிவியல் சார்ந்த கலையாகும். எனவே இதில் புறவகைப்பரிகாரச்செயல்களினால் ஒரு பொழுதும் கர்மப்பலன்களை மாற்றியமைக்கமுடியாது. 
எப்படியெனில், ஒருவர் சாதகத்தில் தீமையான காலத்தில் கொலை  செய்யும்படியாகின்றது.  இதற்கு நீதிமன்றம் என்ன தண்டனை கொடுக்கிறதோ அதை ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். இந்த செயல்களை சோதிடத்தினால் முன்னரே கூறமுடியும்.ஆனால் நடைபெறும் தீயவிளைவுகளை மாற்றியமைக்கமுடியாது.இதற்கு எந்த பரிகாரத்தை செய்து சிறைவாசத்தில் இருந்து விடுவிக்கமுடியும். இப்படியெல்லாம் கர்மவினைப் பயனை மாற்றியமைக்கமுடியும் என்றால் நாமும் முகேஸ் அம்பானி போல் கனவு இல்லத்தில் வாழமுடியும். 
 நமது இந்தியர் ஹைதராபாத் நகரைச் சேர்ந்த பெருமைக்கும் மதிப்பிற்கும் உரிய திருவாளர்.  satya nadella  (06-01-1967 ல்பிறந்தவர்.)அவர்கள் தனது கர்மவினையினால் ஆண்டிற்கு 120 கோடி ரூபாய் சம்பளம் பெறும் அளவிற்கு உயர்ந்துள்ளார். ஒரு பணியாளர் இவ்வளவு சம்பளம் பெறுவது அவரது சாதகத்தின் கோள் நிலைப்பலன்கள் ஆகும் . எனவே தீயகாலத்தினால் எற்படும் தீய செயல்களின் விளைவுகள்,  நல்ல செயல்கள் செய்வதற்குரிய நல்லகாலம் வரும் வரைக்கும் காத்திருக்க வைக்கும் நன்றி. உங்களின் அடுத்த வினாவில் மற்ற பலன்களைக் காணலாம். 

Sunday 26 October 2014

தலைவிதியை மாற்றியமைக்கும் வழி சோதிடசாத்திரதில் இல்லை. அப்படியிருந்திருந்தால் உலகில் அனைவராலும் மதிக்கக்கூடிய கோடீஸ்வரக் கலைஞர்கள் நாம் தான் !!!

அன்புடன் எனது நண்பரும்,மாணவரும், போடிநாயக்கனூரின் சோதிடப் பெரியோருமாகிய திரு.பாஸ்கரன் அவர்களுக்கு வணக்கங்கள் பல. தாங்கள் அனுப்புகின்ற வினாக்களுக்கு நன்றிகள். தங்களின் வினாக்களுக்கு பதில்கள் விரிவாகவும், விளக்கமாகவும் எழுத வேண்டியுள்ளது. எனவே விளக்கமான பதில்களை நூலில் காண்க. தங்களின் ஆர்வம் காரணமாக சுருக்கமான பதில்கள் இங்கு கொடுக்கப்படுகின்றது. 
 வினா எண் ; 1. ஒருவரின் தலைவிதியை சோதிடப்பலன்கள் மாற்றமடைய செய்யுமா?     நிச்சயமாக முடியாது. சோதிடப்பலன்கள் எதிர்காலத்தில் ஒருவருக்கு என்ன நடக்கும் என்று கூறுகிறதே தவிர மாற்றியமைக்கும் வழிகளைக் கூறவில்லை. கூறவும் முடியாது. ஏனெனில். 6,8,12, ம்பாவக தன்மையில் ஏற்படும் தீய பலன்கள்,பின்னர் வரும் நற்பாவக காலங்களிலேயே மாற்றம் ஏற்படும்.அதுவரை பொறுமையாகத்தான் வாழ்ந்து முடிக்கவேண்டும். தீயதை ,நன்மையாகவோ, அல்லது நன்மையை,தீமையாகவோ மாற்றியமைக்கும் வழியை சோதிடசாத்திரத்தில் எங்கும் காணமுடியாது. அவ்வாறு கூறப்பட்டு இருந்தால் நாம் அனைவரும் மிகப்பெரிய மனிதர்களாகவும்.செல்வந்தர்களாகவும் மாறியிருக்கமுடியம்
இந்த உலகம் மதிக்கும் சாதனை விருதுகளை நம்மில் பலர் பெற்றும் இருப்பர். 5000 ஆண்டுகள் பழைமையான இந்த சோதிடவியலை நான்( Prof.Dr.T.Vimalan.) வந்து 2002ல் இளங்கலை பட்டப்படிப்பை தொடங்க வேண்டியநிலையில் உலகம் வைத்திருந்தது. இதுதான் சோதிடவியலின் உண்மை நிலை. மாற்றமடையக் கூடிய தன்மையில் இச்சோதிடக்கலை இருந்திருக்குமானால் உலகில் உள்ளோர் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இச்சோதிடக்கலையை பாடமாக நடத்தி பல்வேறு ஆய்வுகள் நிகழ்த்தி வளர்த்து வந்திருப்பர்.                    நாம் வேண்டுமானால் சோதிடராக மாறியிருக்கலாம். நமது பிள்ளைகளை சோதிடராக்குவதற்கு எவ்வளவு தயக்கம் ஏற்படுகிறது. சோதிடத்தினால் எதிர்காலம் ஒன்றை மட்டுமே கூற முடியும். எதையும் மாற்றி அமைக்க முடியாது. மீதியை நூலில் காண்க.

Wednesday 22 October 2014

இந்து சமயம் - அறிந்து கொள்ளுங்கள் -7---22/10/2014

இந்தோ-ஆரியர் ; உலகத்தின் தொன்மையான வைதீக சமயம்,சனாதன சமயம் என்று புகழப்படுகிற இந்து சமயத்தை தோற்றுவித்தவர்கள் இந்தோ- ஆரியர்கள் ஆவர்.இந்துகுஸ் மலைப்பகுதிகளிலும்,  சிந்து நதிகளின் நிலப்              பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடம் இந்தோ-ஈரானியர்கள் குடி பெயர்ந்துள்ளனர். அக்குடிப்பெயர்ச்சியினால் ஏற்கனவே இருந்த இறைவழி பாட்டு அமைப்புகளை மாற்றினர். தங்களுடைய கடவுள்கள் அனைத்து அச்சங்களையும் அழிக்கக்கூடியவர்கள் என்றனர். அதன்படி தாங்கள் ஏற்கனவே ஈரான் பகுதிகளில் அறிந்து கொண்ட இறை வழிபாட்டு அமைப்பையும் இணைத்து புதிய கடவுளர்களையும்,வழிபாட்டு விதிகளையும் ஏற்படுத்தினர். அவற்றை மந்திர சொற்களாக உருவாக்கினர்.அச்சொற்களுக்கு
உரிய மொழியாக சமஸ்கிருதம் என்ற பெயர் வழங்கப்பட்டது. இம்மொழியில் தான் அனைத்து இறை வழிபாட்டு மந்திரங்களுக்கும் மூலமாகத்திகழும் வேதங்கள் உருவாக்கப்பஹுட்டன. கி.மு இரண்டாயிரத்திற்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட இந்து சமய வேதங்கள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒரே காலங்களில் உருவாக்கப் பட்டவையல்ல.
இந்து சமய வேதங்கள். இந்துக்களின் புனிதமான நூல்களில் மிகவும் பழமையானது இருக்கு வேத நூலாகும். இந்நூல்களில் உள்ள மந்திரச் சொற்களனைத்தும் உருவமற்ற இறைவர்களை வழிபடும் அமைப்பாகும். உலகில் இன்றளவும் உருமற்ற இறைவழிபாட்டுடைய சமயமாக இந்துசமயம் திகழுகிறது. இக்கருத்து நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால் ஆய்ந்து நோக்கினால் உண்மை புலனாகும். அதேபோல் மாமிசத்தை உண்ணும் சமயமும் ஆகும். எப்படியெனில், இந்து சமய வழிபாடு அக்னி குண்டம் என்று கூறப்படும் வேள்வி வழிபாடு ஆகும். இதில் அக்னி வளர்த்து அதில் உயிர்ப்பழி கொடுத்து ,மந்திரங்கள் ஓதப்பட்டு இறை வணக்கம் செய்யப்படும்.இவ்வாறுஅக்னி வளர்ப்பதில் சில விலங்குகள் பலியிடப்படும். அவற்றில் பசு, யாகத்திற்கு பலியிடப்படும் உயிர்களில் முதன்மையான தாகும். பசு கிடைக்கவில்லையெனில்,மான்போன்ற சைவ விலங்குகள் பலியிடப்படும். வேள்வி முடிந்த பின்னர் அக்னிகுண்டத்தை இடித்துவிடவேண்டும். அதெ அக்னி குண்டத்தில் திரும்பவும் வேள்வி நடத்தப்படவில்லை. இறைவழிபாட்டிற்கு என்று ஒரு கோயிலும் கட்டப்படவில்லை. நாம் காணும் கோயில்கள் அனைத்தும் கி.பி.க்குப் பின்னர் கட்டப்பட்டதாகும். இக்கோயில்களில்  உள்ள வழிபாடுகள் அனைத்தும் இந்து சமயத்தின் வேதவழிபாட்டு மந்திரங்களும் அல்ல.
எனவே நம்முடைய இந்து சமயத்தில் உருவ வழிபாடும் இல்லை. கோயில் வழிபாடும் இல்லை. பின்னர் எப்படி உருவ வழிபாடு ஏற்பட்டது? கி.மு 2000க்கும் --- கி.பிக்கும் இடையில் நடந்தது என்ன? வேதங்களில் என்ன கூறப்பட்டுள்ளன போன்ற பல்வேறு வினாக்களுக்கு விடைகாணலாம்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Tuesday 30 September 2014

இந்து சமயம்-அறிந்து கொள்ளுங்கள்--6 29/09/2014.

இந்தோ-ஈரானியர்கள் : இந்திய -ஐரோப்பியக் கலாச்சாரம், தனக்குள் பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டுள்ளது. அவை, இந்தோ-ஈரானியம், இந்தோ-ஆர்யம்,ஆர்யம் என்று பிரிகின்றன.இவற்றின் தலைப்பிற்கேற்ப சிறிய குறிப்புகளாக விளக்க முற்படுகிறேன்.இந்தொ-ஈரானியர்கள் என்று அழைக்கப்
படுபவர்கள்,யூப்ரடீஸ்-டைகிரீஸ் நதி சார்ந்து வாழ்ந்தமக்கள் என்று முன்னரே
அறிந்துள்ளோம்.இந் நாகரீகத்தின் எல்லைப் பகுதிகளாக வடக்கே அனடொலியன் பீடபூமியும்,தெற்கே பாரசீக வளைகுடாவும்,மேற்கே அரேபிய- சிரியா பாலைவனப் பகுதிகளும்,கிழக்கே ஈரானிய பீடபூமிகளாகவும் இருந்துள்ளன. இக்கலாச்சாரம்(நாகரீகம்) கி.மு.6000 ல் தோன்றியதாகும். அதனால் கிறிஸ்து பிறப்பு வரையிலான 6000 ஆண்டுகள் இடைவெளியில் இப்பகுதியில் வாழ்ந்த மக்களை பல்வேறு பெயர்களில் அழைத்துள்ளனர். அவற்றில் சுமேரியம்,மெசபதோமியம்,அக்கேடியம்,அசீரியம்,பாபிலோனியம், சால்தியம் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாக இருந்துள்ளன.
சுமேரியம் ; கி.மு.6000க்கு முன்னர் வாழ்ந்த உலகத்தின் தொன்மையான கலாச்சாரத்தின் பட்டியலில் இடம் பெற்றவராவர். இயற்கை வழிபாடுகளும்,உருவவழிபாடுகளும்,சூரியன் போன்ற கோள்கள் வழிபாடுகளும் செய்துள்ளனர். இனக்குழுவாக வாழ்ந்த அமைப்பு படிப்படியாக வளர்ச்சியடைந்து பெரிய கூட்டமாக மாற்றி அமைக்கப்பட்டன. அவற்றிற்கு தலைமையாக அரசர் போன்ற அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன. அந்த அரச கூட்டத்தினர்க்கு என்று புதிய கடவுள்களும், வழிபாடு செய்வதற்குரிய விதிகள், கட்டமைப்புகள் போன்றவையும் எற்படுத்தப்பட்டன. இவ்வாறு காலத்திற்கேற்ப பல கடவுள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இவர்களுக்குப்பின்னர் இப்பகுதியில் வாழ்ந்த மக்களையும்,அவர்களின் வாழ்வியல் கலாச்சாரத்தையும் இனணத்து பல பெயர்களில் அழைத்துள்ளனர்.
மெசபதோமியநாகரீகம் (கி.மு.3000), அசீரிய நாகரீகம் (கி.மு.2000),பாபிலோனிய நாகரீகம்(கி.மு.1800) என்ற பெரிய நாகரீகங்கள் ஏற்பட்டுள்ளன.இந்நாகரீகங்கள் அனைத்திலும் காலத்திற்கேற்ப கடவுள்கள், வழிபாடுகள் மாறிக்கொண்டே வந்துள்ளன. வானத்தில் உள்ள நட்சத்திரங்கள்,கோள்கள் ,கிரகணகால நிலைகள் போன்றவற்றை தொடர்ச்சியாக ஆய்வு செய்துள்ளனர். அதனடிப்படையில் உலகின் வானசாத்திரம், சோதிடசாத்திரத்திற்கு பெரிதும் துணை புரிந்துள்ளனர். வானசாத்திரமும், சோதிடசாத்திரமும் இவர்களின் கண்டுபிடிப்பு ஆகும். பல நூற்றாண்டுகள் தொடர்ச்சியான வானசாத்திரம்,சோதிட சாத்திரக் கண்டுபிடிப்புகள் பாபிலோனியப்பேரரசின் வீழ்ச்சிக்குப்பின்னர்(கி.மு.500) கிரேக்கத்தில் வளர்ச்சியடையத் தொடங்கின. கிரேக்கத்தின் வளர்ச்சியடைந்த வானசாத்திர ஆய்வுகளினால் வானத்தில் உள்ள இராசி மண்டலத்திற்கு கிரேக்க மொழியில் பெயர்கள் சூட்டப்பட்டன. இவ்வாறு ஒரு பக்கம் வானசாத்திரம்,சோதிடசாத்திரம் வளர்ச்சியைப்பெற்றன.
இங்ஙனம் வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடையேதான் கி.மு3000க்கு முன்னர் இந்திய ஐரோப்பியர்கள் குடிபெயர்ந்தனர். இக்குடிபெயர்ப்பில்,இங்குள்ள கடவுள்கள், இறை வழிபாடுகள் கட்டமைப்புகளுடன் ஒன்று பட்டுள்ளனர். கி.மு.2500க்குப் பின்னர் சிந்து சமவெளி நாகரீகத்திற்கு ஒருபிரிவினர் குடி பெயர்ந்தனர். இவர்களை இந்தோ-ஆரியர் என்று அழைக்கப்பட்டனர்.