சோதிடம் பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள்
உலகில் பல கலைகள் உள்ளன.அவை ஒவ்வொன்றும் மானுடத்திற்கு ஏதாவது
ஒரு வகையில் பயன்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. அவ்வாறு பயன் படுவதில் முதன்மையான
கலையாக சோதிடத்தை தான் கூற முடியும். இந்த
சோதிடக்கலையானது,,,, வானசாத்திரத்தை மட்டும்
எடுத்துக் கொண்டு மற்ற கலைகள் எவற்றையும் சாராமல் 4000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து
கொண்டிருக்கிறது.
மிகவும் பழைமையான சோதிடக்கலை தனக்கே உரிய வகையில் பல்வேறு சூழ்நிலைகளில்
வாழ்ந்த மனிதர்களால் வளர்க்கப்பட்டதாகும். அதிலிருந்தே மானுடத்திற்கு இச் சோதிடக் கலையின்
பயன் எவ்வாறு இருந்துள்ளது என்று யூகித்துக் கொள்ளலாம்.
உலகில் உள்ள பல நாட்டவர்களின் கூட்டு உழைப்பின் முழு வடிவமாக
தற்பொழுதுள்ள சோதிடக்கலையைக் காணலாம்…. உலகில் உள்ள நாடுகளில் சோதிடத்தை அதிகமாக பயன்
படுத்துவது இந்தியாவாகும்…..இதை ஒரு சிறப்பாகவே கூறலாம்….
இந்திய சோதிடம் வானசாத்திரத்தை மையமாகக் கொண்டாலும் எதிர் காலப்பலன்களைக்
கண்டுபிடிப்பதில் பல விதிகளை வகுத்துள்ளது…அவ்விதிகளைக் கொண்டு எதிர்காலத்தில் நடைபெறும்
,நற்பலன்கள்,தீயபலன்களை வரையறுக்கிறது…அவற்றைக் கொண்டு எதிர்காலத்தின் பலன்களை மக்களுக்கு
கூறுகின்றது..
மிகுதியானப் பலன்கள் சோதிடம் கூறியது போல் நடைபெறுவதால் நம்
மக்களின் வாழ்வில் இன்றியமையாத ஒருகலையாக இடம் பெற்றுள்ளது……
சில வினாக்கள் ;
1.அப்படியானால் சோதிடம்
ஏன் எதிர்க்கப் படுகிறது???
சோதிடத்தை எவரும் எதிர்க்கவில்லை. சோதிடம் என்ற பெயரைக் கொண்டு
மாற்று வழிச் சிந்தனைகளைக் கூறுவதால் எதிர்க்கப் படுகிறது…
சொதிடத்தில் கூறப்பட்ட பொதுவானப் பலன்களை அப்படியே தனி ஒரு சாதகருக்கு
கூறுவதினால் எதிர்க்கப்படுகிறது. ( பெண்களின் ருது சாதகப் பலன்களில் ,,,செவ்வாய்கிழமை
ருதுவானால் விதவை என்று பொதுவாகக் கூறப் பட்டிருக்கும்..இப்பலனை அப்படியே கூறுவது )
இதனால்
தற்பொழுது பெண்களுக்கு ருது சாதகம் எழுதுவது மிகவும் குறைந்துள்ளது.
அதேபோல் தீய கோள்கள் எட்டில் இருந்தால் அதற்குரியப் பொதுப் பலன்களைக்
அப்படியே கூறுவது… இவை போன்று பல் வேறு நிலைகளைக் கூறலாம்.
ஆன்மீகக் கருத்துக்களைக் கொண்டு எதிர்காலப் பலன்களை மாற்றுகிறேன்
என்பதால் எதிர்க்கப் படுகிறது…இவை போல் நிறைய உள்ளன..…
ஆனால் சில ஆன்மீகப் பெரியோர்கள் சோதிடத்தை மறுத்துள்ளனர்…
.எடுத்துக்காட்டாக சுகபோதானந்த சுவாமிகள் தங்களது மனமே ரிலாக்ஸ் என்கிற
கேசட்டில் HOROSCOPE சாதகம் என்பதை///////////// HORROR SCOPE திகில்கலை என்று கூறியுள்ளார்……ஏன்
அப்படி கூறியிருப்பார் என்று சிந்தித்தால் ஒருவருக்கு அச்சம் தரும் பலன்களைப் பெரிது
படுத்திக் கூறுவதால் இந்த முடிவிற்கு வந்திருக்கலாம்…
இவர்களைப் போலவே சக்கிவாசுதேவ் சுவாமிகளும் சோதிடம் வேலையா செய்கிறது..என்று
கேட்டுள்ளார்……..
இவர்கள் எல்லாம் ஆன்மீகப் பெரியோர்கள் இவர்கள் தங்கள் ஆன்மீக
வழிகளில் மானுடப் பிரச்சனைகள் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள். ஆதலால்
இவர்களுக்கு சோதிடம் பெரிதாகப் படவில்லை..எனவே சோதிடம் பற்றிய இவர்களது முடிவுகள் மாறுபட்டதாகிறது…
ஆனால் தத்துவாதியான ரஜனிஸ் ஓசோ அவர்கள் இப்படிக் கூறவில்லை…அவர்
சோதிடம் பற்றிய தனது கருத்தில் அழகான முடிவை கொடுத்துள்ளார்…..சோதிடம் ஒரு நல்ல கலையாகும்..
அக்கலை மானுடத்தின் எதிர்கால நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ளச் செய்கிறது என்கிறார்….
எதிர்காலத்தில்
நடைபெறும் நற்பலன்கள், தீயபலன்களை ஏற்றுக்கொள்ளச் செய்வதால் மானுடத்தின் எதிர்காலம்
பற்றிய தேவையற்ற அச்சத்தைப் போக்குகிறது என்கிறார்…….
உண்மையில் நமது சோதிடத்தை உருவாக்கிய அக்காலச் சோதிடப் பெரியோர்கள் எதிர்காலப் பலன்களை அப்படியே
கூறியுள்ளனரே தவிர மாற்று வழி சிந்தனைகளைக் கூறவில்லை….அதனாலேயே சோதிடக்கலை பலரால்
நம்பப்பட்டு வளர்ந்து வந்துள்ளது………
ஆனால் தற்கால அறிவியல் வளர்ச்சியில் சோதிடம் வளர வேண்டு மானால்
சோதிடப்பலன்களை மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்வதிலேயே உள்ளது…..
2. தலையெழுத்தை மாற்ற
முடியாது என்றால் சோதிடம் பார்ப்பதினால் என்ன பலன்?????
எத்தனையோ நன்மைகள் உள்ளன…. …எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று
தெரிவதால் அதற்கு தகுந்தாற்போல் தங்கள் நிலைகளை மாற்றிக் கொள்வர்.
தீயபலன்களைத் தெரிந்து கொள்வதால் அவற்றை முழுமனதுடன் ஏற்று கொண்டு
குழப்பம் அடையாமல் வாழ்க்கையை நடத்துவர்…
3 எதிர்காலத் தீயபலன்களை அறிவதால் அச்சம் ஏற்படாதா??//
நிச்சயமாக அச்சம் ஏற்படாது…தனக்கு இப்படி தான் நடக்கும் என்பதை
அறிந்த எவரும் மனக்குழப்பமோ வருத்தமோ, அதிர்ச்சியோ அடைய மாட்டார்கள்…..
6—8---12----ஆகிய பாவங்களின் பலன்களை மறைத்துக் கூறச் சொல்லி
தான் சோதிடப் பெரியோர்கள்…கூறியிருப்பர்……{ஆனால் தற்பொழுது அவை மறைவு வீடு என்றுள்ளது
}…அதன்படி இப்பாவங்களின் பலன்களை மிகைப் படுத்தாமல் பக்குவமாக எடுத்துக் கூறி ஏற்றுக்கொள்ளச்
செய்வதிலே சோதிடரின் அனுபவம் இருக்கிறது..
சோதிடம் எதிர்காலப் பலன்களைக் கூறும் அற்புதமானக்கலையாகும்.
இக்கலைபோல் வேறு எந்தக் கலையும் இல்லை…ஆலயத்திற்கு சென்றால் கூட அங்கு அவரே பேசி,,அவரே
முடிவெடுப்பார்…………………………..
ஆனால் சோதிடம் பார்த்தால் எதிர்காலம் பற்றிய அச்சத்தைப் போக்கி
செயல்களை பற்றுடன் செய்வதற்கு வழி ஏற்படும்
4.அப்படியானால் சோதிடம்
மானுட முயற்சியைத் தடுக்கிறதா??//
நிச்சயமாக இல்லை…மாறாக மானுட முயற்சிகளின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளச்
செய்கிறது………சோதிடம் ஒரு பொழுதும் ஒருவரின் செயலை நிறுத்துவதற்குப் பலன்களை ஏற்படுத்தவில்லை…………………………
எதிர்காலத்தில் என்னென்ன முடிவுகள் ஏற்படும் என்று கூறுகின்றது….
5.அப்படியானால் ஒவ்வொருவரும் சோதிடப்படி வாழ்வை அமைத்துக் கொள்ளலாமா????
இது அவரவர் விருப்பம்……தேவையானவர்களுக்கு பயன்படும் கலையாகும்….ஒருவர்
விரும்பினாலும்..விரும்பாவிட்டாலும் ..அவரின் வாழ்வை சோதிடத்தின் மூலமாக எளிதில் அறியலாம்….
மானுடத்தின் பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் ஒரே கலை சோதிடமாகும்……..உலகில்
வேறு எந்த கலைக்கும் இல்லாத சிறப்பான அம்சமாகும்….
நாம் சோதிடத்தில் கூறியுள்ள அடிப்படை விதிகளைக் கொண்டு எதிர்காலப்
பலன்களை மட்டும் கூறினால் சோதிடமும் வாழும்…நாமும் வாழுவோம்…..
மிக்க நன்றி……………………………………………….professor..vimalan.
08-01-2015..
08-01-2015..